‛ஆனந்த ராகம்...' பாடிய பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார் | ஒரு பாடலுக்கு நடனம் : விஜய் படத்தை நிராகரித்த ஸ்ரீ லீலா | இயக்குனருடன் சண்டை : படப்பிடிப்பை நிறுத்திய சவுந்தர்யா ரஜினிகாந்த் | மலையாளத்தில் மட்டுமே வெளியான நிவின்பாலி படம் | மூன்று வாரம் முன்கூட்டியே ரிலீசாகும் மம்முட்டியின் டர்போ | 100 கிலோ எடை தூக்கிய ராஷ்மிகா மந்தனா | நடிகை பிரக்யா நக்ராவை திருமணம் செய்தாரா ஜெய்? | அஜித்தின் 53வது பிறந்தநாள் : பரிசாக பைக் வழங்கிய ஷாலினி | தனி வீடு வாங்கிய ஐஸ்வர்யா ரஜினிகாந்த் | குக் வித் கோமாளியில் என்ட்ரி கொடுக்கும் அக்ஷய் கமல் |
ஸ்டுடியோ க்ரீன் பட நிறுவனத்தின் பங்குதாரர்களில் ஒருவரான எஸ்.ஆர்.பிரபு, ட்ரீம்வாரியர் என்ற பெயரில் ஒரு பட நிறுவனத்தை நிர்வகித்து வருகிறார். இந்த நிறுவனம் சார்பில் ஜோக்கர் படம் தயாரிக்கப்பட்டது. இதுதவிர, நயன்தாரா நடிப்பில் 'மாயா' எனும் வெற்றிப் படத்தை தயாரித்த 'பொட்டென்ஷியல் ஸ்டுடியோஸ்' என்ற நிறுவனமும் எஸ்.ஆர்.பிரபுவுக்கு சொந்தமானது தான்.
'பொட்டென்ஷியல் ஸ்டுடியோஸ்' நிறுவனத்தின் அடுத்த தயாரிப்பாக 'மாநகரம்' என்ற படம் உருவாகியுள்ளது. சந்தீப் கிஷன், ஸ்ரீ, ரெஜினா முக்கிய ரோலில் நடித்துள்ளனர். அறிமுக இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கியுள்ளார். 'ஹைபர் லிங்க்' எனும் புதிய திரைக்கதை யுக்தியில் இந்தப் படம் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த ஆக்ஷன் த்ரில்லர் படம் சில தினங்களுக்குமுன் சென்சாருக்கு அனுப்பி வைக்கப்பட்டது. மாநகரம் படத்தை பார்த்த சென்சார் போர்டு 'யு/ஏ' சான்றிதழ் வழங்கியுள்ளது.
பொட்டென்ஷியல் ஸ்டுடியோஸ் நிறுவனத்தின் முதல் தயாரிப்பான 'மாயா' படத்திற்கும் யு/ஏ சான்றிதழ்தான் கிடைத்தது. 'யு/ஏ' சான்றிதழ் பெற்றதால் மாநகரம் படத்துக்கு வரிவிலக்கு கிடைக்காது என்றாலும், திட்டமிட்டபடி இப்படத்தை மார்ச் 10ஆம் தேதி வெளியிடத் திட்டமிட்டுள்ளது பொட்டென்ஷியல் ஸ்டுடியோஸ் நிறுவனம்.