போஜ்புரி நடிகை தற்கொலை : இறப்புக்கு முன் வெளியிட்ட பதிவு | செப்டம்பர் 27ல் திரைக்கு வரும் அமரன் | புத்திகெட்டு திரிந்தால்தான் புத்தி வரும் : செல்வராகவன் | தக்லைப் படத்தில் இணைந்த இரண்டு பாலிவுட் நடிகர்கள் | இளையராஜா பற்றி இனி பேசினால் நடப்பதே வேறு : வைரமுத்துவை எச்சரித்த கங்கை அமரன் | ஆன்மிகப் பயணத்தால் மாறிய வாழ்க்கை : ரம்யா பாண்டியன் வெளியிட்ட பதிவு | அஜித் படத்தில் இணையும் இளம் நடிகை | மே 17ல் ரிலீஸ் ஆகும் எலக்சன் படம் | ஆளைக் கொல்லும் நடிப்பு : பஹத் பாசிலுக்கு நயன்தாரா பாராட்டு | துருவா சார்ஜா வீட்டு விழாவில் குடும்பத்துடன் பங்கேற்ற சஞ்சய் தத் |
தமிழகத்தில் நிலவி வரும் அசாதாரண அரசியல் சூழலில் நடிகர் ரஜினிகாந்த் தனியாக ஒரு அரசியல் கட்சியை துவக்க இருப்பதாக தகவல் வெளியாகியிருக்கிறது. நடிகர் ரஜினிகாந்த் அரசியலுக்கு வருவாரா...? என்று பல ஆண்டுகளாகவே மில்லியன் டாலர் கேள்வியாக இருந்து வருகிறது. அவரும் அரசியலுக்கு வந்துவிட மாட்டாரா...? என்று அவரது ரசிகர்களும் ஆவலாய் காத்து கிடக்கின்றனர்.
ஜெயலலிதா மறைவுக்கு பின், நடிகர் ரஜினி அரசியலுக்கு வர வேண்டும் என, தமிழகம் முழுவதும் உள்ள, அவரது ரசிகர்கள் வேண்டுகோள் விடுத்து வருகின்றனர். தன் அரசியல் பயணம் தொடர்பாக, முன்னாள் மத்திய அமைச்சர், ப.சிதம்பரம், தென் சென்னை மாவட்ட காங்கிரஸ் தலைவர், கராத்தே தியாகராஜன், நக்கீரன் கோபால் உள்ளிட்ட, மூத்த பத்திரிகையாளர்களிடம், ரஜினி முக்கிய ஆலோசனை நடத்தியதாக கூறப்படுகிறது. அதுமட்டுமின்றி சமீபத்தில் தன் ரசிகர் மன்ற நிர்வாகிகளுடன் ரஜினி அரசியல் பிரவேசம் குறித்து முக்கிய ஆலோசனையில் ஈடுபட்டுள்ளார்.
இந்நிலையில், நடிகர் ரஜினிகாந்த் விரைவில் அரசியல் கட்சி துவங்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. ஆர்எஸ்எஸின் முக்கிய பிரமுகரும், மறைந்த சோவின் நெருங்கிய நண்பருமான குருமூர்த்தியுடன் துணையுடன் அவர் அரசியலில் களம் காண இருப்பதாக கூறப்படுகிறது. இதுப்பற்றி விரைவில் அறிவிப்பு வெளியாகலாம் என தெரிகிறது.