போட்டோ சூட் நடத்திய நிறைமாத கர்ப்பிணி அமலா பால் | அரிவாளுடன் விக்ரம் நிற்கும் வீர தீர சூரன் போஸ்டர் : போலீசுக்கு பறந்த புகார் | குழந்தை பிறப்பை தள்ளி போடாதீர்கள் - சீரியல் நடிகை ஜூலி அட்வைஸ் | 100 நாட்களைக் கடந்த ‛வேட்டையன்' படப்பிடிப்பு | வில்லன் நடிகருடன் பிரேக்கப்பா? - புகைப்படம் மூலம் முற்றுப்புள்ளி வைத்த காதலி | இறுதிக்கட்ட படப்பிடிப்பில் திரிஷாவின் ஐடென்டிட்டி | ஜப்பானில் வெளியாகும் 777 சார்லி ரிலீஸ் தேதி அறிவிப்பு | பவன் கல்யாண் பட டைட்டிலில் சமந்தா நடிக்கும் புதிய படம் | 7 ஆண்டுகளுக்கு பிறகு திரையில் வருகிறார் அதிதி பொஹங்கர் | மேக்-அப் அறையில் அடைத்து சித்ரவதை : டிவி நடிகை பரபரப்பு புகார் |
சசிகலாவால் நான் நேரடியாக பாதிக்கப்பட்டேன் என்று கங்கை அமரன் கூறியுள்ளார். அதிமுக., பொதுச் செயலாளராக உள்ள சசிகலா விரைவில் முதல்வராகவும் பொறுப்பேற்க உள்ளார். ஆனால் நேற்று முதல்வர் பன்னீர் செல்வம் கொடுத்த அதிரடி பேட்டியை தொடர்ந்து தமிழக அரசியலில் பரபரப்பு காணப்படுகிறது. சசிகலாவிற்கு எதிர்ப்புகள் அதிகரித்த வண்ணம் உள்ளது. இந்நிலையில் இசையமைப்பாளரும், இயக்குநருமான கங்கை அமரன், சசிகலாவால் தான் நேரடியாக பாதிக்கப்ட்டதாக கூறியுள்ளார்.
திருப்பூரில் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்க வந்த கங்கை அமரன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் பேசும்போது, சசிகலாவால் நான் நேரடியாக பாதிக்கப்பட்டேன். என் சொத்துக்களை அபகரிக்க உடந்தையாக இருந்தவர். இவர் ஆட்சியில் அமருவது நியாயமா...?, ஜெயலலிதா மரணத்தில் உள்ள சந்தேகங்களை வெளி கொண்டு வர வேண்டும். பன்னீர் செல்வம் உண்மையான ஆம்பள. சொத்து குவிப்பு தொடர்பான வழக்கு நிலுவையாக உள்ள சூழலில் எதற்காக முதல்வராக வர வேண்டும் என்று சசிகலா அவசரம் காட்டுகிறார். எம்எல்ஏ.,வின் ஆதரவு சசிகலாவிற்கு இருந்தாலும், மக்களின் ஆதரவு பன்னீருக்கு தான் உள்ளது என்றார்.
தன்னுடைய சொத்துக்களை சசிகலா அபகரித்து விட்டதாக ஏற்கனவே பல பேட்டிகளில் கங்கை அமரன் குற்றம் சாட்டி வந்தது குறிப்பிடத்தக்கது.