போஜ்புரி நடிகை தற்கொலை : இறப்புக்கு முன் வெளியிட்ட பதிவு | செப்டம்பர் 27ல் திரைக்கு வரும் அமரன் | புத்திகெட்டு திரிந்தால்தான் புத்தி வரும் : செல்வராகவன் | தக்லைப் படத்தில் இணைந்த இரண்டு பாலிவுட் நடிகர்கள் | இளையராஜா பற்றி இனி பேசினால் நடப்பதே வேறு : வைரமுத்துவை எச்சரித்த கங்கை அமரன் | ஆன்மிகப் பயணத்தால் மாறிய வாழ்க்கை : ரம்யா பாண்டியன் வெளியிட்ட பதிவு | அஜித் படத்தில் இணையும் இளம் நடிகை | மே 17ல் ரிலீஸ் ஆகும் எலக்சன் படம் | ஆளைக் கொல்லும் நடிப்பு : பஹத் பாசிலுக்கு நயன்தாரா பாராட்டு | துருவா சார்ஜா வீட்டு விழாவில் குடும்பத்துடன் பங்கேற்ற சஞ்சய் தத் |
இப்போது அஜித் நடிக்கும் 'விவேகம்' சூர்யா நடிக்கும் 'தானா சேர்ந்த கூட்டம்' மற்றும் 'ரம்' ஆகிய படங்களுக்கு இசை அமைத்து வருகிறார் அனிருத். வருடத்துக்கு அதிகபட்சம் மூன்று படங்களுக்கு மட்டுமே இசையமைப்பது என்றும், மற்ற நேரத்தில் வெளிநாடுகளுக்கு சென்று இசை நிகழ்ச்சிகளை நடத்துவதிலும் ஆர்வம் காட்டி வருகிறார். இதனால் அனிருத்துக்கு கூடுதல் வருமான் கிடைப்பது ஒரு பக்கம் இருந்தாலும் இன்னொரு பக்கம் உலகம் முழுக்க ஏராளமான ரசிகர்களும் அனிருத்துக்கு கிடைத்திருக்கிறார்கள். அது அவருக்கு புதிய கௌரவத்தை தேடிக் கொடுத்திருக்கிறது.
இந்நிலையில் இசை சேவை வழங்கி வரும் ஆப்பிள் மியூசிக் நிறுவனத்தின் இந்தியாவுக்கான பிராண்ட் அம்பாசிடராக நியமிக்கப்பட்டுள்ளார் அனிருத். தென் இந்தியாவை சேர்ந்த ஒருவர் ஆப்பிள் நிறுவனத்தின் பிராண்ட் அம்பாசிடர் ஆகி இருப்பது இதுதான் முதல் முறை!
'ஆப்பிள் மியூசிக் நிறுவனத்தின் இந்திய பிரதிநிதியாக செயல்படவிருப்பது பெருமையாகவும், மகிழ்ச்சியாகவும் இருக்கிறது' என்று இது குறித்து ட்விட்டரில் குறிப்பிட்டுள்ளார் அனிருத். ஆப்பிள் நிறுவனத்தின் பிராண்ட் அம்பாசிடர் ஆகியுள்ள அனிருத்துக்கு விக்னேஷ்சிவன், நயன்தாரா, சிவகார்த்திகேயன் உள்ளிட்ட திரையுலகை சேர்ந்தவர்களும், ரசிகர்களும் வாழ்த்து தெரிவித்திருக்கிறார்கள்! எதிர்பார்த்ததுபோலவே அனிருத்துக்கு தனுஷ் வாழ்த்து சொல்லவில்லை.