ஒரு பாடலுக்கு நடனம் : விஜய் படத்தை நிராகரித்த ஸ்ரீ லீலா | இயக்குனருடன் சண்டை : படப்பிடிப்பை நிறுத்திய சவுந்தர்யா ரஜினிகாந்த் | மலையாளத்தில் மட்டுமே வெளியான நிவின்பாலி படம் | மூன்று வாரம் முன்கூட்டியே ரிலீசாகும் மம்முட்டியின் டர்போ | 100 கிலோ எடை தூக்கிய ராஷ்மிகா மந்தனா | நடிகை பிரக்யா நக்ராவை திருமணம் செய்தாரா ஜெய்? | அஜித்தின் 53வது பிறந்தநாள் : பரிசாக பைக் வழங்கிய ஷாலினி | தனி வீடு வாங்கிய ஐஸ்வர்யா ரஜினிகாந்த் | குக் வித் கோமாளியில் என்ட்ரி கொடுக்கும் அக்ஷய் கமல் | மீண்டும் முத்தையா இயக்கத்தில் விஷால் |
பி.வாசு இயக்கத்தில் ராகவா லாரன்ஸ், ரித்திகா சிங், வடிவேலு மற்றும் பலர் நடித்துள்ள 'சிவலிங்கா' படத்தின் வெளியீடு ஏப்ரல் மாதத்திற்கு தள்ளி வைக்கப்பட்டுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. முதலில் இந்தப் படம் இந்த மாதம் 17ம் தேதியன்று வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், அன்றைய தினம் ராகவா லாரன்ஸ் நடித்துள்ள மற்றொரு படமான 'மொட்ட சிவா கெட்ட சிவா' படமும் வெளியாகும் என விளம்பரப்படுத்தி வந்தார்கள். தமிழ்த் திரையுலகில் ஒரு நடிகர் நடித்த படம் ஒரே தினத்தில் வெளியாகக் கூடாது என பல வருடங்களுக்கு முன்பே முடிவெடுத்திருந்தனர். அது இந்தப் படங்களின் மூலம் மீற வேண்டிய சூழ்நிலை உருவானது.
இதனிடையே இது பற்றி திரைப்படக் கூட்டமைப்பு சார்பில் சில தினங்களாக பேச்சு வார்த்தை நடைபெற்று வந்துள்ளது. அதன் முடிவில் 'மொட்ட சிவா கெட்ட சிவா' படத்தை பிப்ரவரி 17ம் தேதி வெளியிடலாம் என்றும், 'சிவலிங்கா' படத்தை தள்ளி வைத்துக் கொள்ள வேண்டும் முடிவெடுத்ததாகத் தெரிகிறது. அதைத் தொடர்ந்து 'சிவலிங்கா' படத்தின் தயாரிப்பாளர்கள் படத்தை ஏப்ரல் மாதத்திற்கு தள்ளி வைத்துவிட்டார்களாம். அடுத்த மாதம் தேர்வுகள் நடைபெறும் மாதம் என்பதால் ஏப்ரல் மாதமே சரியாக இருக்கும் என வினியோகஸ்தர்களும் தெரிவித்தார்களாம். அதோடு, படத்தை தமிழ், தெலுங்கில் தயாரித்துள்ளதால் இரு மொழிகளிலும் ஒரே தினத்தில் வெளியிட்டால்தான் படத்திற்கும் நல்லது என்ற காரணமும் அதில் அடங்கியுள்ளது.