‛ஆனந்த ராகம்...' பாடிய பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார் | ஒரு பாடலுக்கு நடனம் : விஜய் படத்தை நிராகரித்த ஸ்ரீ லீலா | இயக்குனருடன் சண்டை : படப்பிடிப்பை நிறுத்திய சவுந்தர்யா ரஜினிகாந்த் | மலையாளத்தில் மட்டுமே வெளியான நிவின்பாலி படம் | மூன்று வாரம் முன்கூட்டியே ரிலீசாகும் மம்முட்டியின் டர்போ | 100 கிலோ எடை தூக்கிய ராஷ்மிகா மந்தனா | நடிகை பிரக்யா நக்ராவை திருமணம் செய்தாரா ஜெய்? | அஜித்தின் 53வது பிறந்தநாள் : பரிசாக பைக் வழங்கிய ஷாலினி | தனி வீடு வாங்கிய ஐஸ்வர்யா ரஜினிகாந்த் | குக் வித் கோமாளியில் என்ட்ரி கொடுக்கும் அக்ஷய் கமல் |
விக்ரமின் மார்க்கெட் ஸ்டெடியாக இருந்தது வரை அவருடன் நடிக்க இளவட்ட நடிகைகள் முண்டியடித்தனர். ஆனால் இப்போது அவரது மார்க்கெட் டல்ல டிப்பதால் மார்க்கெட்டில் முன்னணியில் இருக்கும் நடிகைகளிடம்அவருடன் நடிக்க கால்சீட் கேட்டால் கதை பிடிக்கவில்லை, கால்சீட் இல்லை என ஏதேனும் ஒரு காரணத்தை சொல்லி எஸ்கேப்பாகி வருகிறார்கள். அந்த வகையில், வாலு பட டைரக்டர் விஜயசந்தர் இயக்கத்தில் விக்ரம் நடிக்கும் படத்தில் அவருக்கு ஜோடியாக நடிக்க முதலில் கீர்த்தி சுரேஷிடம்தான் கால்சீட் கேட்டார்கள். ஆனால் சூர்யாவின் தானா சேர்ந்த கூட்டம் படத்தில் மட்டுமே நடித்து வரும் அவர், கால்சீட் இல்லை என்று சொல்லி விட்டார். அதன்பிறகுதான் மஞ்சிமா மோகன், சாய் பல்லவி என்று வெவ்வேறு நடிகைகளிடம் கால்சீட் கேட்டனர்.
இதில், சாய் பல்லவி விக்ரமுடன் நடிக்க கமிட்டாகி பின்னர் கால்சீட் பிரச்சினை யால் வெளியேறினார். அதையடுத்து தமன்னாவிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அவரோ, கதையும், எனக்குரிய கதாபாத்திரமும் பிடித்தால் கண்டிப்பாக நடிக்கிறேன் என்று கூற, அவரிடம் முழுக்கதையையும் சொல்லப்பட்டது. பின்னர் ஓரிரு தினங்களில் பதிலளிப்பதாக சொன்ன தமன்னா, இப்போது விக்ரம் படத்தில் நடிப்பதற்கு ஓகே சொல்லிவிட்டார். அதையடுத்து, அவருக்கு சம்பளம் உள்ளிட்ட விசயங்களும் பேசி முடிவுக்கு வந்து விட்டது. பிப்ரவரி 10-ந்தேதி முதல் சென்னையில் விக்ரம்-தமன்னா சம்பந்தப்பட்ட காட்சிகள் படமாக்கப்பட உள்ளதாம்.