போஜ்புரி நடிகை தற்கொலை : இறப்புக்கு முன் வெளியிட்ட பதிவு | செப்டம்பர் 27ல் திரைக்கு வரும் அமரன் | புத்திகெட்டு திரிந்தால்தான் புத்தி வரும் : செல்வராகவன் | தக்லைப் படத்தில் இணைந்த இரண்டு பாலிவுட் நடிகர்கள் | இளையராஜா பற்றி இனி பேசினால் நடப்பதே வேறு : வைரமுத்துவை எச்சரித்த கங்கை அமரன் | ஆன்மிகப் பயணத்தால் மாறிய வாழ்க்கை : ரம்யா பாண்டியன் வெளியிட்ட பதிவு | அஜித் படத்தில் இணையும் இளம் நடிகை | மே 17ல் ரிலீஸ் ஆகும் எலக்சன் படம் | ஆளைக் கொல்லும் நடிப்பு : பஹத் பாசிலுக்கு நயன்தாரா பாராட்டு | துருவா சார்ஜா வீட்டு விழாவில் குடும்பத்துடன் பங்கேற்ற சஞ்சய் தத் |
தணிக்கை குழு வழங்கும் சான்றிதழால் படத்தின் வெற்றி தோல்வியை தீர்மானிக்க முடியாது என்று இயக்குனர் ஈரம் அறிவழகன் கூறினார். சென்னையில் நேற்று நடந்த நிசப்தம் என்ற படத்தின் பாடல் வெளியீட்டு விழாவில் பேசும்போது அவர் இதனை குறிப்பிட்டார். அவர் மேலும் பேசியதாவது:
இந்த படம் பார்த்தேன், ரொம்ப ஆழமான படம். சமூகத்திற்கு தேவையான படம் என்று நினைக்கிறேன். இன்றைக்கு ஒரு தயாரிப்பாளரைப் பார்த்துக் கதை சொல்லப்போனால் இந்த படத்துக்கு யூ சர்டிபிகேட் கிடைக்குமா இல்லை என்றால் யூ/ஏ கிடைக்குமா? என்று தான் முதலில் கேட்கிறார்கள். படம் முடிந்து சென்சாருக்கு போய் யூ சர்ட்டிபிகேட் கொடுத்துட்டாங்க என்றால் அங்கேயே படத்தின் வெற்றியை முடிவு செய்து விடுகிறார்கள். ஆனால் ஒரு படத்தின் வெற்றி தோல்வியை தீர்மானிப்பது தணிக்கை சான்றிதழ் அல்ல, ரசிகர்கள்தான் .
இந்த நேரத்தில் நான் வைக்கிற வேண்டுகோள் என்னவென்றால், யூ வோ யூஏ வோ என்ன சர்ட்டிபிகேட் வேண்டுமென்றாலும் கொடுங்கள். ஆனால் சமூக விழிப்போடு சமுதாயத்துக்குத் தேவைப்படுகிற துணிச்சலான சப்ஜெக்ட்டுக்கு நிச்சயமாக யூ சர்ட்டிபிகேட் கொடுக்க வேண்டும் என்று கோரிக்கை வைக்கிறேன். அததோடு வரி விலக்கும் கொடுக்க வேண்டும். ஏனென்றால் அப்போது தான் இளம் திறமைசாலி இயக்குநர்கள் தொடர்ச்சியாக நல்ல படமாக எடுக்க முடியும் என்றார்.
விழாவில் நடிகர் ராதாரவி, ஒளிப்பதிவாளரும் நடிகருமான நட்டி என்கிற நட்ராஜ், இசையமைப்பாளர் சங்கர்கணேஷ், தயாரிப்பாளரும், நடிகருமான ஆர்.கே.சுரேஷ், இயக்குநர்கள் மீரா கதிரவன், மிஷ்கின், கிருத்திகா உதயநிதி ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டனர்.
நிசப்தம் படத்தை மிராக்கிள் பிக்சர்ஸ் சார்பில் ஏஞ்சலின் டாவின்ஸி தயாரித்துள்ளார். அஜய், அபிநயா, பேபி சாதன்யா உள்பட பலர் நடித்துள்ளனர். ஷான் ஜேஸீஸ் இசை அமைத்துள்ளார். மைக்கேல் அருண் இயக்கி உள்ளார்.