போஜ்புரி நடிகை தற்கொலை : இறப்புக்கு முன் வெளியிட்ட பதிவு | செப்டம்பர் 27ல் திரைக்கு வரும் அமரன் | புத்திகெட்டு திரிந்தால்தான் புத்தி வரும் : செல்வராகவன் | தக்லைப் படத்தில் இணைந்த இரண்டு பாலிவுட் நடிகர்கள் | இளையராஜா பற்றி இனி பேசினால் நடப்பதே வேறு : வைரமுத்துவை எச்சரித்த கங்கை அமரன் | ஆன்மிகப் பயணத்தால் மாறிய வாழ்க்கை : ரம்யா பாண்டியன் வெளியிட்ட பதிவு | அஜித் படத்தில் இணையும் இளம் நடிகை | மே 17ல் ரிலீஸ் ஆகும் எலக்சன் படம் | ஆளைக் கொல்லும் நடிப்பு : பஹத் பாசிலுக்கு நயன்தாரா பாராட்டு | துருவா சார்ஜா வீட்டு விழாவில் குடும்பத்துடன் பங்கேற்ற சஞ்சய் தத் |
வடிவேலு காமெடியனாக வலம் வந்து கொண்டிருந்தபோது, படங்களின் கதைகள் பிடிக்கிறதோ இல்லையோ அந்த கதைகளில் தனக்கு காமெடி செய்வதற்கு எந்த அளவுக்கு முக்கியத்துவம் உள்ளது என்பதை முன்வைத்தே படங்களை ஓகே பண்ணி நடித்து வந்தார். அதோடு, டைரக்டர்கள் காமெடி காட்சிகளை கொடுத்தபோதும், அதை தனது பாணியில் டெவலப் செய்து நடித்து வந்தார்.
ஆனால் தற்போது காமெடியனாக ரீ-என்ட்ரியாகியிருக்கும் அவர், அந்த பழைய பாணியில் இருந்து விலகி, தான் நடிக்கும் படங்களின் கதைகளும் தனக்கு பிடித்தால் மட்டுமே நடிப்பது என்று முடிவெடுத்திருக்கிறார். காரணம் படங்கள் வெற்றி பெற்றால்தான் தனது காமெடியும் ரீச்சாகும் என்று நினைக்கிறாராம்.
அந்த வகையில், விஜய்யுடன் நடிக்கும் 61-வது படத்தின் கதையையும் முழுவதும் கேட்டு ஓகே பண்ணியிருக்கும் வடிவேலு, இந்த படத்தில் தான் நடிக்கும் காமெடி காட்சிகளை எப்படியேனும் ஹிட் பண்ணி விட வேண்டும் என்று முழுவீச்சில் தயாராகிக்கொண்டிருக்கிறார்.
மேலும், இதுவரை விஜய்யுடன் இணைந்து தான் நடித்துள்ள பகவதி, போக்கிரி, வில்லு, சுறா, காவலன் என அனைத்து படங்களிலுமே காமெடி காட்சிகள் ஹிட்டடித்ததால், அந்த செண்டிமென்ட் இந்த படத்திலும் தொடரும் என்று உற்சாகத்தில் இருக்கிறார் வடிவேலு.