போஜ்புரி நடிகை தற்கொலை : இறப்புக்கு முன் வெளியிட்ட பதிவு | செப்டம்பர் 27ல் திரைக்கு வரும் அமரன் | புத்திகெட்டு திரிந்தால்தான் புத்தி வரும் : செல்வராகவன் | தக்லைப் படத்தில் இணைந்த இரண்டு பாலிவுட் நடிகர்கள் | இளையராஜா பற்றி இனி பேசினால் நடப்பதே வேறு : வைரமுத்துவை எச்சரித்த கங்கை அமரன் | ஆன்மிகப் பயணத்தால் மாறிய வாழ்க்கை : ரம்யா பாண்டியன் வெளியிட்ட பதிவு | அஜித் படத்தில் இணையும் இளம் நடிகை | மே 17ல் ரிலீஸ் ஆகும் எலக்சன் படம் | ஆளைக் கொல்லும் நடிப்பு : பஹத் பாசிலுக்கு நயன்தாரா பாராட்டு | துருவா சார்ஜா வீட்டு விழாவில் குடும்பத்துடன் பங்கேற்ற சஞ்சய் தத் |
அவள் பெயர் தமிழரசி படத்தில் அறிமுகமானவர் வித்யா. அதன் பிறகு விருந்தாளி, சைவம், அதிபர், பசங்க 2, படங்களில் நடித்தார். சமீபத்தில் வெளியான அச்சமின்றி படத்தில் சமுத்திரகனி ஜோடியாக நடித்தார். தற்போது அசுரகுலம், தலகால் புரியல, ஒத்தைக்கு ஒத்த படங்களில் நடித்து வருகிறார். இதுதவிர தெலுங்கு மற்றும் மலையாளப் படங்களிலும் நடித்து வருகிறார்.
தற்போது கன்னடப் படத்திலும் அறிமுகமாகிறார். பங்கரா சன் ஆஃப் பங்காரத் மனுஷ்யா என்ற படத்தில் நடித்திருக்கிறார். இதில் அவர் சிவராஜ்குமார் ஜோடியாக நடித்துள்ளார். "அச்சமின்றி படத்தில் வாய்பேச முடியாத பெண்ணாக நடித்தேன். அதுபோன்ற சவாலான கேரக்டர்களில் நடிக்கவே விரும்புகிறேன். சீனியர் நடிகர் சமுத்திரகனியுடன் நடித்தபோது பல விஷயங்களை அவர் மூலம் கற்றுக் கொண்டேன். கன்னட படத்தில் நடித்திருப்பதன் மூலம் தென்னிந்திய நடிகை ஆகிவிட்டேன்" என்கிறார் வித்யா.