‛ஆனந்த ராகம்...' பாடிய பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார் | ஒரு பாடலுக்கு நடனம் : விஜய் படத்தை நிராகரித்த ஸ்ரீ லீலா | இயக்குனருடன் சண்டை : படப்பிடிப்பை நிறுத்திய சவுந்தர்யா ரஜினிகாந்த் | மலையாளத்தில் மட்டுமே வெளியான நிவின்பாலி படம் | மூன்று வாரம் முன்கூட்டியே ரிலீசாகும் மம்முட்டியின் டர்போ | 100 கிலோ எடை தூக்கிய ராஷ்மிகா மந்தனா | நடிகை பிரக்யா நக்ராவை திருமணம் செய்தாரா ஜெய்? | அஜித்தின் 53வது பிறந்தநாள் : பரிசாக பைக் வழங்கிய ஷாலினி | தனி வீடு வாங்கிய ஐஸ்வர்யா ரஜினிகாந்த் | குக் வித் கோமாளியில் என்ட்ரி கொடுக்கும் அக்ஷய் கமல் |
சி3 படத்தை விளம்பரப்படுத்தவே நடிகர் சூர்யா, ஜல்லிக்கட்டிற்கு ஆதரவாக போராடுகிறார் என்று பீட்டா கூறிய கருத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து பீட்டாவிற்கு நோட்டீஸ் அனுப்பியிருக்கிறார் சூர்யா.
நடிகர் சூர்யா தொடர்ந்து ஜல்லிக்கட்டு நிகழ்ச்சியை ஆதரித்து வருகிறார். ஆனால் பீட்டா அமைப்பின் நிர்வாகி நிகுஞ்ச் சர்மா என்பவர், பட விளம்பரத்துக்காகவே ஜல்லிக்கட்டை சூர்யா ஆதரிப்பதாக பேசினார். இது சூர்யா ரசிகர்கள் இடையே கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. சமூக வலைதளங்களில் பீட்டாவிற்கு எதிராக கடும் கண்டனங்களை சூர்யா ரசிகர்கள் தெரிவித்தனர்.
அதோடு இந்த சம்பவம் சூர்யாவையும், சூர்யா குடும்பத்தையும் மிகவும் வருத்தமடைய செய்திருக்கிறது. அதனால் ஜல்லிக்கட்டுக்காக தன் சி3 புரொமோஷனையும் தள்ளி வைத்தார் சூர்யா. இந்நிலையில், தவறான செய்தியை பரப்பி வரும் பீட்டா அமைப்பை மன்னிப்பு கோரும்படியும், அவர்கள் பரப்பிய செய்தி தவறானது என்பதை தெரிவிக்கும் வகையில் பிரஸ் ரிலீஸ் ஒன்றை 7 நாட்களுக்குள் வெளியிடும்படியும் கூறி நடிகர் சூர்யா சார்பில் அவரது வக்கில் ஆர்.விஜய் ஆனந்த், பீட்டா அமைப்புக்கு வக்கீல் நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.