‛ஆனந்த ராகம்...' பாடிய பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார் | ஒரு பாடலுக்கு நடனம் : விஜய் படத்தை நிராகரித்த ஸ்ரீ லீலா | இயக்குனருடன் சண்டை : படப்பிடிப்பை நிறுத்திய சவுந்தர்யா ரஜினிகாந்த் | மலையாளத்தில் மட்டுமே வெளியான நிவின்பாலி படம் | மூன்று வாரம் முன்கூட்டியே ரிலீசாகும் மம்முட்டியின் டர்போ | 100 கிலோ எடை தூக்கிய ராஷ்மிகா மந்தனா | நடிகை பிரக்யா நக்ராவை திருமணம் செய்தாரா ஜெய்? | அஜித்தின் 53வது பிறந்தநாள் : பரிசாக பைக் வழங்கிய ஷாலினி | தனி வீடு வாங்கிய ஐஸ்வர்யா ரஜினிகாந்த் | குக் வித் கோமாளியில் என்ட்ரி கொடுக்கும் அக்ஷய் கமல் |
காதல் படத்தில் ஜாதி வெறியையும், கல்லூரி படத்தில் அரசியல் வெறியையும், வழக்கு எண் படத்தில் பணக்கார திமிரையும் பதிவு செய்த பாலாஜி சக்திவேல் அடுத்து இயக்கி வரும் படம் ரா...ரா...ராஜசேகர். லிங்குசாமியின் திருப்பதி பிக்சர்ஸ் தயாரிக்கிறது. லிங்குசாமியின் சகோதரி மகன் விஜய் முருகன் ஹீரோவாக அறிமுகமாகிறார். கன்னடப் படமான லூசியா, தமிழ் படமான நெருங்கி வா முத்தமிடாதே படங்களில் நடித்த ஸ்ருதி ஹரிகரன் ஹீரோயினாக நடிக்கிறார். சுபிக்ஷா முக்கிய கேரக்டரில் நடிக்கிறார். எழுத்தாளர் வேல.ராமமூர்த்தி வில்லனாக நடிக்கிறார். புதுமுகம் ஜாவீத் ரியாஸ் இசை அமைக்கிறார். சித்தார்த்தா ஒளிப்பதிவு செய்கிறார்.
காதல் படத்தில் ஜாதிவெறி காதலர்களை எப்படி சின்னாபின்னமாக்கியது என்பதை சொன்ன பாலாஜி சக்திவேல் இந்தப் படத்தில் காதல் ஆணவக் கொலை பற்றி பேசுகிறார். அதோடு இன்றைய சமூக அவலங்கள் பற்றியும் படம் பேசுகிறது. கிட்டத்தட்ட இதனை காதல் படத்தின் இரண்டாம் பாகம் என்கிறார்கள். அதிலும் ஜாதிதான் பிரச்சினை, இதிலும் ஜாதிதான் பிரச்சினை. அதில் காதல் தண்டபாணி வில்லன். இதில் வேல.ராமமூர்த்தி வில்லன். அதன் கிளைமாக்சில் மனிநேயத்தை கடைசி புள்ளியாக வைத்திருப்பார். இதில் ஆணவக்கொலைக்கு எதிரான தீர்வை முன்வைக்கிறார். படத்தின் இறுதிகட்ட பணிகள் மும்முரமாக நடந்து வருகிறது. விரைவில் வெளிவர இருக்கிறது.