‛ஆனந்த ராகம்...' பாடிய பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார் | ஒரு பாடலுக்கு நடனம் : விஜய் படத்தை நிராகரித்த ஸ்ரீ லீலா | இயக்குனருடன் சண்டை : படப்பிடிப்பை நிறுத்திய சவுந்தர்யா ரஜினிகாந்த் | மலையாளத்தில் மட்டுமே வெளியான நிவின்பாலி படம் | மூன்று வாரம் முன்கூட்டியே ரிலீசாகும் மம்முட்டியின் டர்போ | 100 கிலோ எடை தூக்கிய ராஷ்மிகா மந்தனா | நடிகை பிரக்யா நக்ராவை திருமணம் செய்தாரா ஜெய்? | அஜித்தின் 53வது பிறந்தநாள் : பரிசாக பைக் வழங்கிய ஷாலினி | தனி வீடு வாங்கிய ஐஸ்வர்யா ரஜினிகாந்த் | குக் வித் கோமாளியில் என்ட்ரி கொடுக்கும் அக்ஷய் கமல் |
ஜல்லிக்கட்டு விவகாரம் தமிழகத்தில் எழுச்சி போராட்டமாக மாறியுள்ளது. ஒட்டுமொத்த தமிழர்களின் குரல் முழுக்க உரக்க கேட்டு கொண்டிருக்கிறது. மாணவர்களின் போராட்டாத்திற்கு ஆதரவாக நடிகர் சங்கம் போராட்டம் நடத்தியது. ஆனால் இதற்கு மாணவர்கள் மற்றும் இளைஞர்கள் மத்தியில் சமூக வலைதளங்களில் கடும் கண்டனங்கள் எழுந்தன.
இந்நிலையில் இன்று நடந்த நடிகர் சங்க போராட்டத்தில் விஜய் உள்ளிட்ட பல நடிகர்கள் பங்கேற்கவில்லை. நடிகர் விமலும் இன்றைய நடிகர் சங்க போராட்டத்தில் பங்கேற்கவில்லை. மாறாக திருச்சி மணப்பாறை அருகே நடந்த ஜல்லிக்கட்டு போராட்டத்தில் பங்கேற்றார்.
இதுப்பற்றி செய்தியாளர்களிடம் பேசிய நடிகர் விமல், ஜல்லிக்கட்டு நடைபெறாமல் இருப்பது வருத்தமளிக்கிறது. நடிகர்கள் நடத்தும் போரட்ட களத்தை விட, மண்ணில் நடந்த போராட்டத்தில் நானும் பங்கேற்று போரடியது மகிழ்ச்சி அளிக்கிறது'' என்று கூறினார்.