போஜ்புரி நடிகை தற்கொலை : இறப்புக்கு முன் வெளியிட்ட பதிவு | செப்டம்பர் 27ல் திரைக்கு வரும் அமரன் | புத்திகெட்டு திரிந்தால்தான் புத்தி வரும் : செல்வராகவன் | தக்லைப் படத்தில் இணைந்த இரண்டு பாலிவுட் நடிகர்கள் | இளையராஜா பற்றி இனி பேசினால் நடப்பதே வேறு : வைரமுத்துவை எச்சரித்த கங்கை அமரன் | ஆன்மிகப் பயணத்தால் மாறிய வாழ்க்கை : ரம்யா பாண்டியன் வெளியிட்ட பதிவு | அஜித் படத்தில் இணையும் இளம் நடிகை | மே 17ல் ரிலீஸ் ஆகும் எலக்சன் படம் | ஆளைக் கொல்லும் நடிப்பு : பஹத் பாசிலுக்கு நயன்தாரா பாராட்டு | துருவா சார்ஜா வீட்டு விழாவில் குடும்பத்துடன் பங்கேற்ற சஞ்சய் தத் |
தமிழ்நாட்டில் மக்கள் ஒன்று சேர்ந்து நடத்திக் கொண்டிருக்கும் போராட்டம், இப்போது மற்ற மாநில மக்களையும், நடிகர்களையும் யோசிக்க வைத்துக் கொண்டிருக்கிறது. மக்கள் போராட்டம் என்றால் என்ன என்பதை இப்போதுதான் நடிகர்களும் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள்.
திரையில் பேசுவது மட்டுமே ஹீரோயிசம் அல்ல என்பதை அவர்கள் உணர்ந்து வருகிறார்கள். தமிழ்த் திரையுலகத்தில் இதுநாள் வரை நடிகர்களை மட்டுமே ஹீரோக்களாக நினைத்துக் கொண்டிருந்த இளைஞர்களை இன்று நடிகர்கள் ஹீரோக்களாகப் பார்க்க ஆரம்பித்திருக்கிறார்கள்.
தெலுங்குத் திரையுலகத்தின் மிகப் பெரும் ஹீரோவாகப் பார்க்கப்பட்டு வரும் நடிகர் பவன் கல்யாண் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக தனது கருத்தை டிவிட்டரில் பதிவு செய்துள்ளார். “ஜல்லிக்கட்டு, கொடிபன்டம் ஆகியவற்றுக்கு தடை விதித்த்து திராவிட கலாச்சாரத்திற்கும், அதன் நேர்மை, நாணயத்தின் மீது தொடுக்கப்பட்ட தாக்குதல். தென்னிந்தியாவில் இவை இப்படித்தான் பார்க்கப்பட்டு வருகிறது. தென்னிந்திய மக்கள் மீது இது ஒரு ஆழமான காயத்தை ஏற்படுத்தியிருக்கிறது.
ஆந்திராவில் மக்களிடம் நேரடியாக உரையாடிய போதும், தமிழ்நாட்டில் பொள்ளாச்சியில் நான் படப்பிடிப்பில் இருந்த போதும், தங்களது கலாச்சார விழாக்கள் மீது ஒரு ஆழமான காயத்தை ஏற்படுத்தியிருப்பதாகவே தென்னிந்திய மக்கள் இதைப் பார்க்கிறார்கள் என்பதை நான் கவனித்துள்ளேன். ஜல்லிக்கட்டு, கொடிபன்டம் ஆகியவற்றை இந்திய அரசு மிருக வதை என்று சொல்லி அவற்றிற்கு தடை விதித்துள்ளது. இதை மிகவும் கண்டிப்புடன் அணுகினால், இந்திய மாட்டுக்கறி ஏற்றுமதி மற்றும் கோழிப் பண்ணை தொழில் ஆகியவற்றைப் பற்றிய புள்ளிவிவரங்களை ஆராய வேண்டும்.
உலகத்திலேயே இறைச்சி ஏற்றுமதியில் இந்தியா பெரிய இடத்தில் உள்ளது. மாட்டிறைச்சி, கன்றுக்குட்டி இறைச்சியை 2.4 மில்லியன் டன் அளவில் 2015ம் ஆண்டில் ஏற்றுமதி செய்துள்ளது. பிரேசில், ஆஸ்திரேலியா ஆகிய நாடுகள் முறையே 2 மில்லியன் மற்றும் 1. 5 மில்லியன் டன் மட்டுமே ஏற்றுமதி செய்துள்ளது.
ஒவ்வொரு ஆண்டும் இறைச்சி ஏற்றுமதி 14 சதவீதம் உயர்ந்து 5 பில்லியன் டாலர் வரை ஈட்டித் தருகிறது. இதில் சுவாரசியமான விஷயம் என்னவென்றால் முதலிடத்தில் இருக்கும் வியாபர நிறுவனங்களுக்கு முஸ்லிம்களுக்கு சொந்தமானதல்ல, இந்துக்களுக்கு சொந்தமானது.
கற்பனை செய்து பாருங்கள், 2.4 மில்லியன் டன் இறைச்சியைப் பெற வேண்டுமென்றால் எத்தனை பசுக்கள், கன்றுக்குட்டிகள், எருமைகள் ஆகியவற்றை வெட்டிக் கொல்ல வேண்டும். இவை மிருக வதைச் சட்டத்தில் வராதா ?, ஏனென்றால் நாம் அதைப் பார்த்த்தில்லை.
வியாபாரத்திற்காக கொல்லப்படும் மிருகங்களின் எண்ணிக்கையை விட, ஜல்லிக்கட்டால் காயப்படுவதாகவோ, அல்லது இறப்பதாகவோ சொல்லப்படுவது பொருத்தமில்லாதது. அப்படியிருக்க, மிருக வதை என்பதை ஜல்லிக்கட்டிற்கு மட்டுமே ஏன் உபயோகிக்க வேண்டும்.
இந்த மிருக வதைச் சட்டம் என்பதைத்தான் கொடிபன்டம் தடை என்பதற்கும் உபயோகப்படுத்தியுள்ளனர். இது கயசுரா என்ற அசுரனைக் கொல்ல குக்குட்டீஸ்வரா அவதாரம் எடுத்து சிவபெருமான் கொன்றதன் மத நம்பிக்கையுடன் தொடர்புடையது. கொடிபன்டம் என்பது ஆந்திர கலாச்சாரத்தின் அடையாளமாகும். இதை தடை செய்ய நினைத்தால் கோழி பண்ணை தொழிலையும் தடை செய்ய வேண்டும். பல லட்சக்கணக்கான கோழிகளைக் கொன்று 8.4 லட்சம் டன் கோழி இறைச்சி தயாரிக்கப்படுகிறது.
நமது சமுதாயத்தில் இப்படிப்பட்ட பைத்தியக்காரத்தனமான அறநெறிகளுக்கு நாம் ஒரு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும். இல்லையென்றால் நமது தேசத்தின் ஒற்றுமைக்கு பாதகம் ஏற்படும். ஜல்லிகட்டு, கொடிபன்டம் ஆகியவற்றின் தடையை உடனே நீக்க வேண்டும் என மத்திய அரசை ஜனசேனா வலியுறுத்துகிறது'' என தெரிவித்துள்ளார்.
தமிழ் ஹீரோக்கள் சிலர் எந்த கருத்தையும் சொல்லாமல் நடிகர் சங்கத்தின் உண்ணாரவித்த்தில் மட்டும் கலந்து கொண்டுள்ள இந்த சூழ்நிலையில் தெலுங்குத் திரையுலகத்தின் மிகப் பெரும் ஹீரோவான பவன் கல்யாண் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவான கருத்தைப் பகிர்ந்து கொண்டதிலும் நிஜ ஹீரோவாகவே பார்க்கப்படுகிறார்.