‛ஆனந்த ராகம்...' பாடிய பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார் | ஒரு பாடலுக்கு நடனம் : விஜய் படத்தை நிராகரித்த ஸ்ரீ லீலா | இயக்குனருடன் சண்டை : படப்பிடிப்பை நிறுத்திய சவுந்தர்யா ரஜினிகாந்த் | மலையாளத்தில் மட்டுமே வெளியான நிவின்பாலி படம் | மூன்று வாரம் முன்கூட்டியே ரிலீசாகும் மம்முட்டியின் டர்போ | 100 கிலோ எடை தூக்கிய ராஷ்மிகா மந்தனா | நடிகை பிரக்யா நக்ராவை திருமணம் செய்தாரா ஜெய்? | அஜித்தின் 53வது பிறந்தநாள் : பரிசாக பைக் வழங்கிய ஷாலினி | தனி வீடு வாங்கிய ஐஸ்வர்யா ரஜினிகாந்த் | குக் வித் கோமாளியில் என்ட்ரி கொடுக்கும் அக்ஷய் கமல் |
ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக ஏ.ஆர்.ரஹ்மான் நாளை உண்ணாவிரதம் இருக்கப்போவதாக அறிவித்திருக்கிறார். ஜல்லிக்கட்டு போராட்டம் நாளை கடையடைப்பு, லாரிகள், பேருந்துகள், கார்கள், ஆட்டோக்கள் ஓடாது என வேறு ஒரு தளத்தை நோக்கி சென்று கொண்டிருக்கிறது. தமிழின உணர்வுள்ள அனைவரும் ஒன்று சேர்ந்து இந்தப் போராட்டத்தை இந்தியா மட்டுமல்லாது உலகமே திரும்பிப் பார்க்கும் அளவிற்கு நடத்திக் கொண்டிருக்கிறார்கள். திரையுலகினரும் பலரும் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக குரல் கொடுத்து வருகின்றனர். இசைப்புயல் ரஹ்மானும் ஜல்லிக்கட்டுக்காக நாளை களம் இறங்க உள்ளார்.
இதுதொடர்பாக ரஹ்மான் தன் டுவிட்டரில் கூறியிருப்பதாவது... ‛‛ஒட்டுமொத்த தமிழ்நாட்டுக்கு ஆதரவு தெரிவிக்கும் விதமாக நாளை நான் உண்ணாவிரதம் இருக்க உள்ளேன் என்று கூறியுள்ளார்.
இதுபோன்று ஒரு பேராட்டத்தில் ஏ.ஆர்.ரஹ்மான் ஈடுபடுவது இதுவே முதன்முறை என்பது குறிப்பிடத்தக்கது.