‛ஆனந்த ராகம்...' பாடிய பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார் | ஒரு பாடலுக்கு நடனம் : விஜய் படத்தை நிராகரித்த ஸ்ரீ லீலா | இயக்குனருடன் சண்டை : படப்பிடிப்பை நிறுத்திய சவுந்தர்யா ரஜினிகாந்த் | மலையாளத்தில் மட்டுமே வெளியான நிவின்பாலி படம் | மூன்று வாரம் முன்கூட்டியே ரிலீசாகும் மம்முட்டியின் டர்போ | 100 கிலோ எடை தூக்கிய ராஷ்மிகா மந்தனா | நடிகை பிரக்யா நக்ராவை திருமணம் செய்தாரா ஜெய்? | அஜித்தின் 53வது பிறந்தநாள் : பரிசாக பைக் வழங்கிய ஷாலினி | தனி வீடு வாங்கிய ஐஸ்வர்யா ரஜினிகாந்த் | குக் வித் கோமாளியில் என்ட்ரி கொடுக்கும் அக்ஷய் கமல் |
ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக மாணவர்கள் போராட்டம் நடத்தி வரும் வேளையில், இதே கருத்தை வலியுறுத்தி நடிகர் சங்கமும் ஜன., 20-ம் தேதி உண்ணாவிரத போராட்டத்தை அறிவித்துள்ளது. தமிழகத்தில் இதுவரை இல்லாத அளவுக்கு, எந்தவித கட்சி, அமைப்புகளின் பின்னணி இல்லாமல், ஜல்லிக்கட்டுக்காக மாணவர்கள் மற்றும் இளைஞர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். திரையுலகினர் பலரும் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக குரல் கொடுத்து வருகின்றனர். இந்நிலையில் இந்த விஷயத்தில் நடிகர் சங்கமும் களமிறங்க உள்ளது. 20ம் தேதி உண்ணாவிரத போராட்டத்தை அறிவித்துள்ளனர்.
இதுதொடர்பாக நடிகர் சங்க துணை தலைவர் சென்னையில் செய்தியாளர்களிடம் பேசியதாவது... ‛‛ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக நடிகர் சங்கம் சார்பில் நாளை மறுநாள்(ஜன., 20-ம் தேதி) உண்ணாவிரத போராட்டம் நடக்கிறது. சென்னை, திநகரில் உள்ள நடிகர் சங்க வளாகத்திலேயே இது நடைபெறுகிறது. இதில் அனைத்து நடிகர், நடிகைகளும் பங்கேற்பார்கள்'‛ என்றார்.
உண்ணாவிரத போராட்டத்தில் பங்கேற்காதவர்கள் மீது நடவடிக்கை எதுவும் எடுக்கப்படுமா...? என்று செய்தியாளர்கள் கேட்டபோது, நடவடிக்கை எதுவும் கிடையாது, இது உணர்வுசார்ந்த போராட்டம், இதில் அனைவரும் பங்கேற்பார்கள் என நம்புகிறோம் என்றார்.