ஹிந்திக்கு செல்லும் தில் ராஜூ! | ரன்வீர் சிங்கை இயக்கும் ஹனுமான் பட இயக்குனர்! | மே 1ம் தேதி ரீ ரிலீஸாகும் தீனா படம்! | கவின், ஆண்ட்ரியா படத்திற்கு இசையமைக்கும் ஜி.வி. பிரகாஷ்! | ஹாலிவுட்டில் ரீ ரிலீசாகிறது 'இன்டர்ஸ்டெல்லர்' | பெண்களை அடிமைப்படுத்தும் 'பரதா': சர்ச்சையுடன் உருவாகும் புதிய படம் | இணையத்தில் கசிந்த 'ராமாயணம்' படப்பிடிப்பு காட்சிகள்: படக்குழு அதிர்ச்சி | புதிய அமைப்பு தொடங்குகிறார் ராகவா லாரன்ஸ் | அப்பாவாக நடிப்பது பெருமை: சமுத்திரகனி | அபிநந்தனாக நடிப்பதே கஷ்டமாக இருந்தது: பிரசன்னா |
தமிழகத்திற்கு பொங்கல் பரிசாக, ஜல்லிக்கட்டு நடத்த அனுமதி தர வேண்டும் என, நடிகர் சங்கம் கூறியுள்ளது.
நடிகர் சங்கம் வெளியிட்ட அறிக்கை: இந்தியாவில் உள்ள அனைத்து மாநில மக்களுக்கும், ஒவ்வொரு கலாசார அடையாளம் உள்ளது. அவை அழியாமல் காக்கப்பட வேண்டும் என்பதில், நடிகர் சங்கம் முழுமையாக நம்புகிறது. ஏறு தழுவுதல் என்கிற ஜல்லிக்கட்டு, தமிழர்களின் தொன்மை அடையாளமாக உள்ளது. சட்டத்தின் முன், ஜல்லிக்கட்டு பற்றி வேறு பார்வை இருக்கிறது. ஆனால், மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகள், இதை சட்டத்திற்கு புரிய வைத்து, நம் மொழிசார்ந்த கலாசாரங்களை வாழ வைப்பது கடமை. தனிப்பட்ட கருத்தை பதிவு செய்ய, அனைவருக்கும் உரிமை உள்ளது. அந்த வகையில், தன் கருத்தை பதிவு செய்த நடிகையிடம், சிலர் எல்லை மீறி அவமரியாதை செய்தது வருந்தத்தக்கது. ஜல்லிக்கட்டு விஷயத்தில், எல்லை மீறல் நடப்பதற்கு முன், மத்திய அரசு அவசர சட்டம் இயற்றியாவது, இந்தாண்டு ஏறு தழுவுதலை நடத்தித் தர வேண்டும் என, நாங்கள் வேண்டுகிறோம். இதுவே, தமிழக மக்களுக்கு தரும் பொங்கல் பரிசாக இருக்கும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.