ஏப்ரல் மாதத்திலும் தொடர்ந்த ஏமாற்றம் - 2024 ஏப்ரல் படங்கள் ஓர் பார்வை | ‛ஆனந்த ராகம்' பாடிய அபூர்வ குரல் உமா ரமணன் காலமானார் | ஒரு பாடலுக்கு நடனம் : விஜய் படத்தை நிராகரித்த ஸ்ரீ லீலா | இயக்குனருடன் சண்டை : படப்பிடிப்பை நிறுத்திய சவுந்தர்யா ரஜினிகாந்த் | மலையாளத்தில் மட்டுமே வெளியான நிவின்பாலி படம் | மூன்று வாரம் முன்கூட்டியே ரிலீசாகும் மம்முட்டியின் டர்போ | 100 கிலோ எடை தூக்கிய ராஷ்மிகா மந்தனா | நடிகை பிரக்யா நக்ராவை திருமணம் செய்தாரா ஜெய்? | அஜித்தின் 53வது பிறந்தநாள் : பரிசாக பைக் வழங்கிய ஷாலினி | தனி வீடு வாங்கிய ஐஸ்வர்யா ரஜினிகாந்த் |
சமீபத்தில் இணையதளம் ஒன்றில் தமிழக மக்கள் சோம்பேறிகள், அவர்களுக்கு மதுடைகள் போது... என்று விஷால் கூறியதாக ஒரு செய்தி வெளியானது. ஆனால் இது முற்றிலும் தவறான செய்தி என்று விஷால் கூறியுள்ளார். அதோடு தன்னைப்பற்றி தவறான செய்தி பரப்புவோர் மீது நடவடிக்கை எடுக்க கோரி சென்னை போலீஸ் கமிஷனரிடம் புகார் மனு ஒன்றையும் அளித்துள்ளார்.
அதில் அவர் கூறியிருப்பதாவது... தமிழக மக்களை நான் பெரிதும் மதிக்கிறேன். என் மீது வீண்பழி சுமத்துவது போல் இந்த செய்தியைவெளியிட்டுள்ள TamilStar.com என்ற வலைத்தளத்தின் மீது நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக்கொள்கிறேன். இது போன்ற வலைதளத்தில் உண்டாக்கப்படும் செய்தியால் தமிழக மக்களின் மனதில் வேற்றுமையை உண்டாக்க வழி செய்கிறார்கள். மேலும் சமீபகாலமாக முகம் தெரியாத நபர்கள் போன் மூலம் (+96896520944, +19196382854, +14436360331) தகாத வார்த்தைகளால் பேசுகிறார்கள். இவர்கள் மீதும் நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்,
இவ்வாறு விஷால் கூறியுள்ளார்