‛ஆனந்த ராகம்...' பாடிய பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார் | ஒரு பாடலுக்கு நடனம் : விஜய் படத்தை நிராகரித்த ஸ்ரீ லீலா | இயக்குனருடன் சண்டை : படப்பிடிப்பை நிறுத்திய சவுந்தர்யா ரஜினிகாந்த் | மலையாளத்தில் மட்டுமே வெளியான நிவின்பாலி படம் | மூன்று வாரம் முன்கூட்டியே ரிலீசாகும் மம்முட்டியின் டர்போ | 100 கிலோ எடை தூக்கிய ராஷ்மிகா மந்தனா | நடிகை பிரக்யா நக்ராவை திருமணம் செய்தாரா ஜெய்? | அஜித்தின் 53வது பிறந்தநாள் : பரிசாக பைக் வழங்கிய ஷாலினி | தனி வீடு வாங்கிய ஐஸ்வர்யா ரஜினிகாந்த் | குக் வித் கோமாளியில் என்ட்ரி கொடுக்கும் அக்ஷய் கமல் |
கேரளாவில் தயாரிப்பாளர்களுக்கும், தியேட்டர்காரர்களுக்கும் இடையே நடைபெற்று வரும் பிரச்சனையால் அங்கு புதிய திரைப்படங்கள் வெளியாவது நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இதனிடையே, நாளை 'பைரவா' தமிழ்ப் படம் அங்கு பல தியேட்டர்களில் வெளியாவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. மல்டிபிளக்ஸ் தியேட்டர்களில் மட்டுமே படம் வெளியாகும் எனத் தெரிகிறது. இதனால், மற்ற தியேட்டர்களில் படத்தை வெளியிடாமல் போனால் வினியோகஸ்தருக்கு பெரும் நஷ்டம் வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
'பைரவா' படத்தைத் தங்களது தியேட்டர்களில் வெளியிட ஏற்கெனவே தியேட்டர்காரர்கள் ஒப்பந்தம் போட்டுள்ளார்களாம். அதை மீறி அவர்கள் படத்தை வெளியிடாமல் போனால் இந்தியப் போட்டி ஆணையத்திடம் அவர்கள் மீது புகார் அளிக்கப்படும் என பத்திரிகை விளம்பரம் மூலம் நோட்டீஸ் ஒன்றை வெளியிட்டுள்ளனர்.
இதனால் கேரளத் திரையுலகில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.