‛ஆனந்த ராகம்...' பாடிய பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார் | ஒரு பாடலுக்கு நடனம் : விஜய் படத்தை நிராகரித்த ஸ்ரீ லீலா | இயக்குனருடன் சண்டை : படப்பிடிப்பை நிறுத்திய சவுந்தர்யா ரஜினிகாந்த் | மலையாளத்தில் மட்டுமே வெளியான நிவின்பாலி படம் | மூன்று வாரம் முன்கூட்டியே ரிலீசாகும் மம்முட்டியின் டர்போ | 100 கிலோ எடை தூக்கிய ராஷ்மிகா மந்தனா | நடிகை பிரக்யா நக்ராவை திருமணம் செய்தாரா ஜெய்? | அஜித்தின் 53வது பிறந்தநாள் : பரிசாக பைக் வழங்கிய ஷாலினி | தனி வீடு வாங்கிய ஐஸ்வர்யா ரஜினிகாந்த் | குக் வித் கோமாளியில் என்ட்ரி கொடுக்கும் அக்ஷய் கமல் |
நான், கண்டிப்பாக காதலித்தே திருமணம் செய்வேன், என, புருஸ்லீ பட நடிகை கிர்த்தி கர்பந்தா கூறியுள்ளார். ஹிந்தி, கன்னட படங்களில் நடித்த, நடிகை கிர்த்தி கர்பந்தா, புருஸ்லீ படம் மூலம் தமிழில் அறிமுகமாகி உள்ளார்.
தமிழில் நடித்த அனுபவம் குறித்து, அவர் கூறியதாவது: என் குடும்பத்தினர் யாரும் சினிமாவில் கிடையாது. நான் முதன்முறையாக சினிமாவில் நடித்துள்ளேன். தமிழில், புருஸ்லீ என் முதல் படம். தமிழில் பேச கற்று வருகிறேன்; விரைவில் தமிழ் பேசுவேன். சூர்யாவுடன் ஜோடி சேர்ந்து நடிக்க ஆசையாக உள்ளது. அதே போல, மணிரத்னம் இயக்கும் படத்திலும் நடிக்க ஆசை. காதல் திருமணமே சிறந்தது; என் திருமணம், காதல் திருமணமாகவே இருக்கும். அதற்கு இன்னும் பல ஆண்டுகளாகும்; நல்ல படங்களில் நடிப்பதே இப்போதைய இலக்கு.இவ்வாறு அவர் கூறினார்.
படத்தில் நடித்த, ஜி.வி.பிரகாஷ்குமார் கூறுகையில், எனக்கு பட்டம் எல்லாம் வேண்டாம்; வேண்டுமானால், டார்லிங் ஜி.வி.பிரகாஷ் என, அழையுங்கள். நான், காமெடியாக
நடிப்பதாக கூறுகின்றனர். இனி வரும் படங்கள், சீரியஸ் ஆக இருக்கும், என்றார்.