இளம் இசையமைப்பாளர் பிரவீண் குமார் மரணம் | ஏப்ரல் மாதத்திலும் தொடர்ந்த ஏமாற்றம் - 2024 ஏப்ரல் படங்கள் ஓர் பார்வை | ‛ஆனந்த ராகம்' பாடிய அபூர்வ குரல் உமா ரமணன் காலமானார் | ஒரு பாடலுக்கு நடனம் : விஜய் படத்தை நிராகரித்த ஸ்ரீ லீலா | இயக்குனருடன் சண்டை : படப்பிடிப்பை நிறுத்திய சவுந்தர்யா ரஜினிகாந்த் | மலையாளத்தில் மட்டுமே வெளியான நிவின்பாலி படம் | மூன்று வாரம் முன்கூட்டியே ரிலீசாகும் மம்முட்டியின் டர்போ | 100 கிலோ எடை தூக்கிய ராஷ்மிகா மந்தனா | நடிகை பிரக்யா நக்ராவை திருமணம் செய்தாரா ஜெய்? | அஜித்தின் 53வது பிறந்தநாள் : பரிசாக பைக் வழங்கிய ஷாலினி |
கங்காரு, வந்தாமல, சாரல் உள்பட சில படங்களில் நடித்தவர் ஸ்ரீ பிரியங்கா. பாண்டிச்சேரி நடிகையான இவர், ஆரம்பத்தில் ஹோம்லியாக மட்டுமே நடிப்பேன் என்று சொன்னபோதும், இப்போது கதைகளுக்கேற்ப ஓரளவு கிளாமராக நடிப்ப தற்கும் தயாராகி விட்டார். அதோடு, விஜயசேதுபதி உள்ளிட்ட சில முன்னணி நடிகர்களுடன் நடிப்பதற்கான முயற்சிகளிலும் ஈடுபட்டுள்ளார். இந்த நேரத்தில் கங்காரு படத்தை தயாரித்த சுரேஷ் காமாட்சி இயக்கி வரும் மிக மிக அவசரம் என்ற படத்தில் தற்போது நடித்து வருகிறார் ஸ்ரீ பிரியங்கா. இந்த படத்தில் அவர் போலீஸ் வேடத்தில் நடித்து வருகிறார்.
இதுபற்றி ஸ்ரீ பிரியங்கா கூறுகையில், இந்த படத்தில் முதன்முறையாக நான் போலீஸ் வேடத்தில் நடிக்கிறேன். இந்த கதையை சுரேஷ் காமாட்சி சொன்னபோது பிரமிப்பாக இருந்தது. அந்த அளவுக்கு ஒரு அழுத்தமான போலீஸ் கதை. அப்போது, விஜயசாந்தி உள்ளிட்ட சில ஆக்சன் ஹீரோயினிகள்தான் என் மனக்கண்ணில் வந்தார்கள். இந்த அளவுக்கு வெயிட்டான ரோலில் நடிக்க முடியுமா? என்றொரு சிறிய பயம் இருந்தபோதும், இதை ஒரு சவாலாக ஏற்று நடிப்போம் என்று முடிவு செய்து நடித்து வருகிறேன்.
மேலும், இந்த படத்திற்காக முதல்நாள் காக்கி சட்டை அணிந்தபோது என்னையுமறியாமல் ஒருவித தைரியம், கம்பீரம் வந்தது. அதனால் இந்த படம் மூலம் கோலிவுட்டில் அதிரடி நடிகை என்கிற இடத்தை பிடித்து விட முடியும் என்கிற தன்னம்பிக்கையும் எனக்கு ஏற்பட்டது. இந்த மிக மிக அவசரம் படம் திரைக்கு வரும்போது, தமிழ்நாட்டு ரசிகர்கள் என்னை முழுமையாக ஏற்றுக்கொள்வார்கள் என்று உறுதியாக நம்புகிறேன் என்கிறார் ஸ்ரீ பிரியங்கா.