ரெட்ட தல படப்பிடிப்பு துவங்கியது | எவரெஸ்ட் சிகரத்திற்கு டிரக்கிங் சென்ற ஜோதிகா | போட்டோ சூட் நடத்திய நிறைமாத கர்ப்பிணி அமலா பால் | அரிவாளுடன் விக்ரம் நிற்கும் வீர தீர சூரன் போஸ்டர் : போலீசுக்கு பறந்த புகார் | குழந்தை பிறப்பை தள்ளி போடாதீர்கள் - சீரியல் நடிகை ஜூலி அட்வைஸ் | 100 நாட்களைக் கடந்த ‛வேட்டையன்' படப்பிடிப்பு | வில்லன் நடிகருடன் பிரேக்கப்பா? - புகைப்படம் மூலம் முற்றுப்புள்ளி வைத்த காதலி | இறுதிக்கட்ட படப்பிடிப்பில் திரிஷாவின் ஐடென்டிட்டி | ஜப்பானில் வெளியாகும் 777 சார்லி ரிலீஸ் தேதி அறிவிப்பு | பவன் கல்யாண் பட டைட்டிலில் சமந்தா நடிக்கும் புதிய படம் |
தமிழ் சினிமாவின் பிரபல தயாரிப்பு நிறுவனமும், பழம்பெரும் நிறுவனமான சத்யா மூவிஸ், தங்களது 50 வருட திரையுலக வாழ்க்கையை கொண்டாடும் விதமாக தங்கள் தயாரிப்பில் வெளிவந்து ரஜினியின் மறக்க முடியாத படங்களில் ஒன்றான பாட்ஷா படத்தை நவீன தொழில் நுட்பத்தில் மெருகேற்றி அதை மீண்டும் வெளியிட இருக்கிறது. 5.1 ஒலி அமைப்புகளும், ஏனைய நவீன தொழில்நுட்ப வேலைப்பாடுகளுடன், டிஜிட்டல் பதிப்பில் பாட்ஷா படம் வெளியாக உள்ளது.
பாட்ஷா படத்தை நவீன தொழில்நுட்பத்தில் வெளியிடும் ஆர்எம்.வீரப்பனின் மகன் தங்கராஜ், சிலதினங்களுக்கு முன்னர் ரஜினிகாந்தை நேரில் சந்தித்து அவரிடம் பாட்ஷா, டிஜிட்டல் பற்றி விளக்கி கூறினார். இதுகுறித்து தங்கராஜ் கூறியிருப்பதாவது...
"டிஜிட்டல் தொழில் நுட்பத்தில் மெருகேறி இருக்கும் பாட்ஷா படத்தின் டிரைலர், ரஜினி சாரை வெகுவாக கவர்ந்து விட்டது. இந்த முயற்சிக்கு பின்னால் ஆர்எம்.வீரப்பன் சாரின் மகனாகிய என்னுடைய பங்கு இருக்கிறது என்பதை அறிந்து கொண்டார். தொழில் நுட்ப ரீதியாக என்னவெல்லாம் செய்ய பட்டிருக்கிறது என்பதை விரிவாக ரஜினி சாருக்கு விளக்கினேன். மேலும் படத்தின் பின்னணி இசையை முழுவதுமாக தேவா சார் புதுப்பித்து இருக்கும் விதத்தை கேள்விப்பட்டதும் மகிழ்ச்சி அடைந்தார்.
இந்த டிஜிட்டல் தொழில் நுட்பத்தில் உருவாகி இருக்கும் பாட்ஷா படத்தை எவ்வாறு ரசிகர்களிடத்தில் முழுமையாக கொண்டு போய் சேர்க்க வேண்டும் என்கின்ற யோசனைகளை எங்களோடு பகிர்ந்து கொண்டார். படம் வெளியீட்டு திட்டங்களை பற்றியும், வெளியாகும் தேதி பற்றிய விவரங்களையும் கேட்டறிந்த ரஜினி, நாங்கள் ஏற்பாடு செய்திருக்கும் பிரம்மாண்ட பிரத்யேக காட்சி மற்றும் நன்கொடைக்காக லண்டனில் ஒளிபரப்படும் சிறப்பு காட்சி பற்றியும், ஜப்பான் ரசிகர்களின் வருகையை பற்றியும் தெரியப்படுத்தினோம். நாங்கள் எடுத்த முயற்சிகளுக்கு உறுதுணையாய் இருந்து, படம் வெற்றி பெற அவருடைய ஆசீர்வாதங்களையும், வாழ்த்துக்களையும் எங்களுக்கு வழங்கினார்''.
இவ்வாறு தங்கராஜ் கூறினார்.