குக் வித் கோமாளியில் என்ட்ரி கொடுக்கும் அக்ஷய் கமல் | மீண்டும் முத்தையா இயக்கத்தில் விஷால் | ரஜினியுடன் இணைந்து நடனமாடும் அனிரூத்? | தக் லைப் படத்தின் புதிய அப்டேட் | ரஜினியின் வாழ்க்கை வரலாற்று படத்தை தயாரிக்கும் பாலிவுட் தயாரிப்பாளர்? | ரஜினியின் ‛கூலி' படத்திற்கு நோட்டீஸ் அனுப்பிய இளையராஜா | 'ஒளியை உணர்கிறேன்' : பிரேக்-அப்பிற்குப் பிறகு ஸ்ருதிஹாசன் | தீனா ரீ-ரிலீஸ் : தியேட்டருக்குள் பட்டாசு வெடித்த அஜித் ரசிகர்கள் | கரு முட்டையை பாதுகாத்து வைத்த நடிகை மெஹ்ரின் | அஜித் பிறந்தநாள் - அப்டேட் ஏதாவது வருமா ? |
லைக்கா புரொடக்ஷன் தயாரிப்பில், ஷங்கர் இயக்கத்தில், ரஜினிகாந்த், அக்ஷய் குமார், எமி ஜாக்சன் மற்றும் பலர் நடிக்க பிரம்மாண்டமாக உருவாகி வரும் படம் '2.0'. இப்படத்தின் படப்பிடிப்பு பல்வேறு இடங்களில் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. சென்னை, ஐதராபாத், மும்பை என மாறி மாறி படப்பிடிப்பை நடத்தி வருகிறார்கள். விரைவில் வெளிநாட்டிலும் படப்பிடிப்பு நடைபெற உள்ளது.
இப்படத்தின் முதல் பார்வை கடந்த மாதம் வெளியிடப்பட்டது. அடுத்த வருட தீபாவளிக்கு படத்தை வெளியிடுவதாகவும் அறிவித்தார்கள். இதனிடையே தற்போது இந்தப் படத்தின் டப்பிங் வேலைகளும் ஆரம்பமாகியுள்ளன. இன்று இப்படத்திற்கான தன்னுடைய டப்பிங்கை ரஜினிகாந்த் ஆரம்பிக்க உள்ளார். இது குறித்து படத்தின் ஒலிப்பதிவுக் கலைஞரான ரசூல் பூக்குட்டி, “சென்னை சென்று கொண்டிருக்கிறேன். சூப்பர் ஸ்டாருடன் 2.0 படத்திற்கான டப்பிங் வேலைகள் ஆரம்பமாகின்றன,” எனக் கூறியுள்ளார்.
படத்தின் பெரும்பாலான படப்பிடிப்புகள் முடிவடைந்துவிட்டது என்கிறார்கள். டப்பிங் மற்றும் இறுதிக்கட்டப் பணிகள், கிராஃபிக்ஸ் வேலைகள் ஆகியவற்றை முடிக்க சுமார் 10 மாத காலம் ஆகும் என்பதால்தான் படத்தின் வெளியீட்டை அடுத்த வருடத் தீபாவளிக்கு வைத்துள்ளார்களாம்.