தயாரிப்பு நிறுவனம் தொடங்கிய நெல்சன் | நாக சைதன்யா, பூஜா ஹெக்டேவை இயக்கும் விருபாக்ஷா இயக்குனர் | ஜூன் 13ல் வெளியாகும் ‛இந்தியன் 2' | தெலுங்கிற்கே முன்னுரிமை தரும் 'குபேரா' குழு | ஒரு அப்டேட் கூட வரவில்லை, வருத்தத்தில் அஜித் ரசிகர்கள் | இளம் இசையமைப்பாளர் பிரவீண் குமார் மரணம் | ஏப்ரல் மாதத்திலும் தொடர்ந்த ஏமாற்றம் - 2024 ஏப்ரல் படங்கள் ஓர் பார்வை | ‛ஆனந்த ராகம்' பாடிய அபூர்வ குரல் உமா ரமணன் காலமானார் | ஒரு பாடலுக்கு நடனம் : விஜய் படத்தை நிராகரித்த ஸ்ரீ லீலா | இயக்குனருடன் சண்டை : படப்பிடிப்பை நிறுத்திய சவுந்தர்யா ரஜினிகாந்த் |
பாக்யராஜ் கண்ணன் இயக்கிய ரெமோ படத்தில் நடித்த சிவகார்த்திகேயன், அதையடுத்து மோகன்ராஜா இயக்கும் பெயரிடப்படாத படத்தில் நயன்தாராவுடன் நடித்து வருகிறார். அதிரடியான ஆக்சன் கதையில் உருவாகும் இந்த படத்தை முடித்த பிறகு வருத்தப்படாத வாலிபர் சங்கம், ரஜினி முருகன் படங்களை இயக்கிய பொன்ராம், ரெமோ டைரக்டர் பாக்யராஜ் கண்ணன் இயக்கும் படங்களில் நடிக்கிறார் சிவகார்த்திகேயன்.
இதற்கிடையே, விஜயசேதுபதி சில படங்களில் டபுள் ஹீரோ கதைகளில் நடிப்பதை மனதில் கொண்டு சிவகார்த்திகேயனையும் சில டைரக்டர்கள் டபுள் ஹீரோ கதையுடன் அணுகினர். ஆனால் அவர் டபுள் ஹீரோ சப்ஜெக்ட் என்றதும் கதையைகூட கேட்க மறுத்து விட்டாராம். நான் நடிக்கிற படங்களில் நான் மட்டுமே ஹீரோவாக இருக்க ஆசைப்படுகிறேன் என்று கூறிய அவர், இதற்கு முன்பு பாண்டிராஜ் இயக்கிய கேடி பில்லா கில்லாடி ரங்கா படத்தில் விமலுடன் சேர்ந்து நடித்துள்ளேன். ஆனால் அது நான் வளர்ந்து வந்த நேரம். இப்போது எனக்கென ஒரு வியாபார வட்டம் உருவாகி விட்டது. இந்த இடத்தை இன்னும் உறுதிப்படுத்த வேண்டும் என்பதே எனது நோக்கமாக உள்ளது. அதனால்தான் மீண்டும் கேடி பில்லா கில்லாடி ரங்கா-2 வில் நடிக்க அழைத்தபோதுகூட அதை நான் ஏற்கவில்லை என்று தனது நிலையை சொல்லி அனுப்புகிறார் சிவகார்த்திகேயன்.