‛ஆனந்த ராகம்...' பாடிய பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார் | ஒரு பாடலுக்கு நடனம் : விஜய் படத்தை நிராகரித்த ஸ்ரீ லீலா | இயக்குனருடன் சண்டை : படப்பிடிப்பை நிறுத்திய சவுந்தர்யா ரஜினிகாந்த் | மலையாளத்தில் மட்டுமே வெளியான நிவின்பாலி படம் | மூன்று வாரம் முன்கூட்டியே ரிலீசாகும் மம்முட்டியின் டர்போ | 100 கிலோ எடை தூக்கிய ராஷ்மிகா மந்தனா | நடிகை பிரக்யா நக்ராவை திருமணம் செய்தாரா ஜெய்? | அஜித்தின் 53வது பிறந்தநாள் : பரிசாக பைக் வழங்கிய ஷாலினி | தனி வீடு வாங்கிய ஐஸ்வர்யா ரஜினிகாந்த் | குக் வித் கோமாளியில் என்ட்ரி கொடுக்கும் அக்ஷய் கமல் |
கதை திரைக்கதை வசனம் இயக்கம் படத்திற்கு பிறகு பார்த்திபன் இயக்கித் தயாரிக்கும் புதிய படம் கோடிட்ட இடங்களை நிரப்புக. சாந்தனு, பார்வதி நாயர், தம்பி ராமய்யாவுடன் பார்த்திபனும் நடித்துள்ளார். சி.சத்யா இசை அமைத்துள்ளார். இதன் படப்பிடிப்புகள் முடிந்து விட்டது. டிசம்பர் இறுதியில் படம் வெளிவருகிறது.
இந்த நிலையில் கோடிட்ட இடங்களை நிரப்புக படத்தின் பாடல் வெளியீட்டு விழாவை பிரமாண்டமாக நடத்துகிறார் பார்த்திபன். வருகிற டிசம்பர் 4ந் தேதி பாடல்கள் வெளியிடப்படுகிறது. தனது குருவான கே.பாக்யராஜின் குருவணக்க நாளாக இதனை கொண்டாடுகிறார். சென்னை ராஜா அண்ணாமலைபுரத்தில் உள்ள இமேஜ் அரங்கில் மாலை 4 மணிக்கு நடக்கிறது.
இந்த விழா அழைப்பிதழுடன் கோடிட்ட இடங்களை நிரப்புகிற வகையில் ஒரு கேள்வித் தாளையும் வழங்கி வருகிறார் பார்த்திபன். அதற்கு சரியான பதிலை பூர்த்தி செய்து விழா நடக்கும் அரங்கில் உள்ள பெட்டியில் போட வேண்டும். சரியான விடை எழுதியிருப்பவர்களுக்கு பாராட்டும், பரிசும் வழங்கப்படும் என அறிவித்திருக்கிறார். நீங்களும் முயற்சித்து பாருங்களேன்...