போஜ்புரி நடிகை தற்கொலை : இறப்புக்கு முன் வெளியிட்ட பதிவு | செப்டம்பர் 27ல் திரைக்கு வரும் அமரன் | புத்திகெட்டு திரிந்தால்தான் புத்தி வரும் : செல்வராகவன் | தக்லைப் படத்தில் இணைந்த இரண்டு பாலிவுட் நடிகர்கள் | இளையராஜா பற்றி இனி பேசினால் நடப்பதே வேறு : வைரமுத்துவை எச்சரித்த கங்கை அமரன் | ஆன்மிகப் பயணத்தால் மாறிய வாழ்க்கை : ரம்யா பாண்டியன் வெளியிட்ட பதிவு | அஜித் படத்தில் இணையும் இளம் நடிகை | மே 17ல் ரிலீஸ் ஆகும் எலக்சன் படம் | ஆளைக் கொல்லும் நடிப்பு : பஹத் பாசிலுக்கு நயன்தாரா பாராட்டு | துருவா சார்ஜா வீட்டு விழாவில் குடும்பத்துடன் பங்கேற்ற சஞ்சய் தத் |
நடிகர் சங்க பொதுக்குழு கூட்டம் இன்று தி.நகரில் உள்ள, நடிகர் சங்கத்திற்கு சொந்தமான இடத்தில் நடந்தது. நடிகர் சங்க தலைவர் நாசர் தலைமையில் துவங்கிய இவ்விழாவில் நடிகர்கள் விஷால், பொன்வண்ணன், கார்த்தி, நாடக கலைஞர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டுள்ளனர். இக்கூட்டத்தின் ஒரு பகுதியாக தமிழ் சினிமாவின் நூற்றாண்டு நிறைவின் தொடக்க விழாவும், மக்கள் திலகம் எம்.ஜி.ஆர் அவர்களுடைய நூற்றாண்டு விழாவும் நடைபெற்றது. மூத்த கலைஞர்கள் பலருக்கும் விருதுகள் வழங்கி, கவுரவிக்கப்பட்டது.
கூட்டம் துவங்கிய சிறிது நேரத்திலேயே முன்னாள் நிர்வாகிகளின் ஆதரவாளர்கள் சிலர், தங்களுக்கும் பொதுக்கூட்டத்தில் கலந்து கொள்ள உரிமை இருப்பதாகவும், அதனால் தங்களை உள்ளே செல்ல அனுமதிக்குமாறு தகராறு செய்துள்ளனர். இதனால் முன்னாள் நிர்வாகிகளின் ஆதரவாளர்களுக்கும், தற்போதைய நிர்வாகிகளின் ஆதரவாளர்களுக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. இந்த மோதல் அடிதடியாக மாறியது. இந்த மோதலில் நடிகர் கருணாஸ் கார் கண்ணாடி உடைக்கப்பட்டது. மோதல் தொடர்பாக 21 பேரை போலீசார் கைது செய்தனர். இதனையடுத்து பொதுக் குழு நடக்கும் இடத்தின் கதவுகள் அனைத்தும் மூடப்பட்டு, கூட்டம் தொடர்ந்து வருகிறது.
இந்நிலையில் பொதுக் குழு கூட்டத்தில் நடந்த மோதல் குறித்து முன்னாள் நிர்வாகியான ராதாரவி கூறுகையில், பொதுக் குழு கூட்டத்தில் நடந்த மோதலுக்கும் எனக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. நடிகர் சங்க பொதுக் குழு முறையாக அறிவிப்புடன் நடைபெறவில்லை. பொதுக்குழு குறித்து 21 நாட்களுக்கு முன்பே அறிவித்திருக்க வேண்டும் என தெரிவித்துள்ளார்.