ஒரு பாடலுக்கு நடனம் : விஜய் படத்தை நிராகரித்த ஸ்ரீ லீலா | இயக்குனருடன் சண்டை : படப்பிடிப்பை நிறுத்திய சவுந்தர்யா ரஜினிகாந்த் | மலையாளத்தில் மட்டுமே வெளியான நிவின்பாலி படம் | மூன்று வாரம் முன்கூட்டியே ரிலீசாகும் மம்முட்டியின் டர்போ | 100 கிலோ எடை தூக்கிய ராஷ்மிகா மந்தனா | நடிகை பிரக்யா நக்ராவை திருமணம் செய்தாரா ஜெய்? | அஜித்தின் 53வது பிறந்தநாள் : பரிசாக பைக் வழங்கிய ஷாலினி | தனி வீடு வாங்கிய ஐஸ்வர்யா ரஜினிகாந்த் | குக் வித் கோமாளியில் என்ட்ரி கொடுக்கும் அக்ஷய் கமல் | மீண்டும் முத்தையா இயக்கத்தில் விஷால் |
பெண்களை பாலியல் பலாத்காரம் செய்யும் ஆண்களுக்கு, ஆண்மையை நீக்க வேண்டும், என, மலையாள நடிகை மீரா ஜாஸ்மின் கூறினார். கேரள மாநிலம், கொச்சி அருகே, பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு, கொலை செய்யப்பட்ட தலித் சமூக இளம் பெண்ணின் தாயை, மலையாள நடிகையும், ரன் உள்ளிட்ட தமிழ் திரைப்படங்களில் நடித்துள்ளவருமான, மீரா ஜாஸ்மின் சந்தித்தார்.
இதன்பின் அவர், செய்தியாளர்களிடம் கூறியதாவது:பெண்களுக்கு எதிராக கொடுமைகள் செய்பவர்களை தண்டிக்க, தற்போதைய சட்டங்கள் போதுமானதாக இல்லை. பெண்களை பாலியல் பலாத்காரம் செய்யும் ஆணுக்கு, ஆண்மையை நீக்க வேண்டும். இது போன்ற கடுமையான தண்டனை இருந்தால், பெண்களை தொடுவதற்கு, கொடூர மனம் படைத்த ஆண்கள் தயங்குவர்.இவ்வாறு அவர் கூறினார்.