போஜ்புரி நடிகை தற்கொலை : இறப்புக்கு முன் வெளியிட்ட பதிவு | செப்டம்பர் 27ல் திரைக்கு வரும் அமரன் | புத்திகெட்டு திரிந்தால்தான் புத்தி வரும் : செல்வராகவன் | தக்லைப் படத்தில் இணைந்த இரண்டு பாலிவுட் நடிகர்கள் | இளையராஜா பற்றி இனி பேசினால் நடப்பதே வேறு : வைரமுத்துவை எச்சரித்த கங்கை அமரன் | ஆன்மிகப் பயணத்தால் மாறிய வாழ்க்கை : ரம்யா பாண்டியன் வெளியிட்ட பதிவு | அஜித் படத்தில் இணையும் இளம் நடிகை | மே 17ல் ரிலீஸ் ஆகும் எலக்சன் படம் | ஆளைக் கொல்லும் நடிப்பு : பஹத் பாசிலுக்கு நயன்தாரா பாராட்டு | துருவா சார்ஜா வீட்டு விழாவில் குடும்பத்துடன் பங்கேற்ற சஞ்சய் தத் |
வெற்றிமாறனின் உதவியாளரான ஆர்.எஸ்.துரை செந்தில்குமார், தனுஷின் வுண்டர்பார் பிலிம்ஸ் தயாரித்த 'எதிர்நீச்சல்' படத்தின் மூலம் இயக்குநராக களமிறங்கினார். அந்தப்படம் கமர்ஷியலாக வெற்றியடைந்ததை அடுத்து எதிர்நீச்சல் படத்தின் நாயகனான சிவகார்த்திகேயனை இரண்டாவது முறையாக கதாநாயகனாக்கி 'காக்கி சட்டை' படத்தை இயக்கினார். தனுஷ் நடித்து கடந்த தீபாவளியை முன்னிட்டு திரைக்கு வந்த 'கொடி' ஆர்.எஸ்.துரை செந்தில்குமார், இயக்கத்தில் வெளியான மூன்றாவது படம்.
கொடி படம் பல திரையரங்குகளில் இன்னமும் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. 'வேலையில்லா பட்டதாரி' படத்திற்குப் பிறகு தனுஷ் நடித்த தங்கமகன் சரியாக ஓடாதநிலையில் 'கொடி' தனுஷிற்கு ஹிட் படமாக அமைந்தது. இவருடைய அடுத்தப் படத்தின் ஹீரோ யார் என்ற கேள்வியில்தான், தனுஷ்- சிவகார்த்திகேயன் இடையிலான மோதலில் ஆர்.எஸ்.துரை செந்தில்குமார் யார் பக்கம் இருப்பார் என்ற கேள்வியும் அடங்கி இருந்தது. அதற்கான விடை தற்போது தெரிய வந்திருக்கிறது.
'கொடி' படத்தை சமீபத்தில் பார்த்த ரஜினி படத்தை மிகவும் ரசித்து பார்த்து மகிழ்ந்தாராம். தனுஷ் இரட்டை வேடத்தில் நடித்தது ரஜினிக்கு மிகவும் பிடித்துப்போனதாம். எனவே, மீண்டும் அதே இயக்குனரின் இயக்கத்தில் நடிக்கச் சொல்லி அவரே தனுஷிடம் அறிவுறுத்தினாராம். மாமனார் பேச்சை மறுக்க முடியுமா? ஆர்.எஸ்.துரை செந்தில்குமார் இயக்கத்தில் மீண்டும் ஒரு படத்தில் நடிக்க ஒப்பந்தம் செய்திருக்கிறாராம் தனுஷ்.