‛ஆனந்த ராகம்...' பாடிய பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார் | ஒரு பாடலுக்கு நடனம் : விஜய் படத்தை நிராகரித்த ஸ்ரீ லீலா | இயக்குனருடன் சண்டை : படப்பிடிப்பை நிறுத்திய சவுந்தர்யா ரஜினிகாந்த் | மலையாளத்தில் மட்டுமே வெளியான நிவின்பாலி படம் | மூன்று வாரம் முன்கூட்டியே ரிலீசாகும் மம்முட்டியின் டர்போ | 100 கிலோ எடை தூக்கிய ராஷ்மிகா மந்தனா | நடிகை பிரக்யா நக்ராவை திருமணம் செய்தாரா ஜெய்? | அஜித்தின் 53வது பிறந்தநாள் : பரிசாக பைக் வழங்கிய ஷாலினி | தனி வீடு வாங்கிய ஐஸ்வர்யா ரஜினிகாந்த் | குக் வித் கோமாளியில் என்ட்ரி கொடுக்கும் அக்ஷய் கமல் |
தென்னிந்திய திரைப்பட ஒளிப்பதிவாளர் சங்கத்தின் தலைவராக என்.கே.விஸ்வநாதனும், பொதுச் செயலாளரா ஜி.சிவாவும், பொருளாளராக கே.ஆர்.செல்வராஜ் இருந்தனர். சமீபத்தில் நடந்த தேர்தலில் பி.சி.ஸ்ரீராம் தலைமையிலான அணி வெற்றி பெற்றது. சங்கத்தின் கணக்கு வழக்குகளை சரிபார்த்ததில் அதில் ஏராளமான முறைகேடுகள் நடந்திருப்பதை கண்டுபிடித்தாக கூறப்படுகிறது.
குறிப்பாக சங்கம் நடத்திய நட்சத்திர கலைவிழாவின் கணக்கில் பல லட்சம் முறைகேடு நடந்துள்ளதாக கண்டறியப்பட்டுள்ளது. சங்கத்திற்கு முறையாக வரி செலுத்தாததால் நன்கொடைகளுக்கு வரி விலக்கு பெற முடியாத நிலை உள்ளது. இதுகுறித்து பலமுறை சங்க நிர்வாகம் அவர்களிடம் விளக்கம் கேட்டும் பதிலளிக்கவில்லை.
இந்த நிலையில் சங்கத்தின் முன்னாள் செயலாளர் ஜி.சிவாவும், தலைவர் என்.கே.விஸ்வநாதனும், பொருளாளர் கே.ஆர்.செல்வராஜும் சங்கத்திலிருந்து தற்காலிகமாக நீக்கப்பட்டுள்ளர். ஜி.சிவா இப்போது பெப்சி தலைவராகவும், கே.ஆர்.செல்வராஜ் செயலாளராகவும் உள்ளனர். இருசங்கத்திற்கு இடையேயும் தயாரிப்பாளர் சங்கம் சமாதான பேச்சுவார்த்தை நடத்தியது. இதனை ஒளிப்பதிவாளர் சங்கம் ஏற்கவில்லை.