தயாரிப்பு நிறுவனம் தொடங்கிய நெல்சன் | நாக சைதன்யா, பூஜா ஹெக்டேவை இயக்கும் விருபாக்ஷா இயக்குனர் | ஜூன் 13ல் வெளியாகும் ‛இந்தியன் 2' | தெலுங்கிற்கே முன்னுரிமை தரும் 'குபேரா' குழு | ஒரு அப்டேட் கூட வரவில்லை, வருத்தத்தில் அஜித் ரசிகர்கள் | இளம் இசையமைப்பாளர் பிரவீண் குமார் மரணம் | ஏப்ரல் மாதத்திலும் தொடர்ந்த ஏமாற்றம் - 2024 ஏப்ரல் படங்கள் ஓர் பார்வை | ‛ஆனந்த ராகம்' பாடிய அபூர்வ குரல் உமா ரமணன் காலமானார் | ஒரு பாடலுக்கு நடனம் : விஜய் படத்தை நிராகரித்த ஸ்ரீ லீலா | இயக்குனருடன் சண்டை : படப்பிடிப்பை நிறுத்திய சவுந்தர்யா ரஜினிகாந்த் |
சூர்யா, அனுஷ்கா, ஸ்ருதிஹாசன் மற்றும் பலர் நடிக்க ஹரி இயக்கத்தில் உருவாகியுள்ள 'சிங்கம் 3' படத்தின் மூன்றாவது பாகமான 'எஸ் 3' படத்தின் இசை வரும் 27ம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், இசை வெளியீட்டு விழாவை பிரம்மாண்டமாக நடத்தாமல், யு டியூப் மற்றும் இணையதளங்கள் மூலமே வெளியிட திட்டமிட்டுள்ளார்களாம்.
சூர்யா தற்போது 'தானா சேர்ந்த கூட்டம்' படத்திற்காக காரைக்குடியில் முகாமிட்டுள்ளார். அங்கு இப்படத்தின் படப்பிடிப்பு தொடர்ச்சியாக ஒரு வாரம் நடக்க உள்ளதாம். 27ம் தேதி இசை வெளியீடு நடத்தினால் படப்பிடிப்பை ஒரு நாள் நிறுத்திவிட்டுத்தான் அவர் வரவேண்டியிருக்கும். அதனால், விழாவே வேண்டாமென முடிவெடுத்திருக்கிறார்களாம்.
சமீப காலமாக சில தயாரிப்பு நிறுவனங்கள் தங்கள் படங்கள் சார்ந்த பிரமோஷன்களை சமூக வலைத்தளங்கள் மூலம் மட்டுமே செய்து வருகின்றன. அவர்கள் 'டிரென்டிங்' வந்தால் மட்டுமே போதும் என நினைக்கிறார்கள். அந்த வகையில் இந்தப் படத்தின் டீசரைக் கூட சமூக வலைத்தளங்களில் நியமிக்கப்பட்ட ஆட்கள் மூலம் தொடர்ச்சியாக ரி-டுவீட் செய்து டிரென்டிங்கில் கொண்டு வந்தனர். ஒரு 'ஹேஷ்டேக்'கை 100 பேர் மட்டும் ரி-டுவீட் செய்தாலே போதும் அது டிரென்டிங்கில் வந்துவிடும். தற்போது பலர் அதைச் செய்துவிட்டு, படத்திற்கு ரசிகர்களிடம் மிகப் பெரும் வரவேற்பு இருக்கிறது என ஒரு மாயத் தோற்றத்தை உருவாக்கி வருகிறார்கள். யு டியூப் பார்வைகளின் எண்ணிக்கையையும் குறுக்கு வழிகளின் மூலம் அதிக எண்ணிக்கையில் காட்ட முடியும் என்பதும் உண்மை.
'அஞ்சான்' படத்திலேயே இப்படி அதிகப்படியாகப் பண்ணியதால்தான் சூர்யா அடி வாங்கினார். தொடர்ந்து அவர் நடிக்கும் படங்களை இப்படியே செய்து கொண்டிருக்கிறார்களே என சூர்யாவின் ரசிகர்கள் வருத்தப்பட்டுக் கொண்டிருக்கிறார்கள்.
அதே சமயம், இப்படத்தை தெலுங்கிலும் தயாரித்திருப்பதால் டிசம்பர் 5ம் தேதி ஐதராபாத்தில் மட்டும் பிரம்மாண்டமான விழா நடத்தத் திட்டமிட்டிருக்கிறார்களாம். சிவகார்த்திகேயனே அங்கு விழா நடத்தும் போது சூர்யாவுக்கு நடத்த மாட்டார்களா என்ன?.