மீண்டும் நடிக்க வரும் ரம்பா | பிரியங்கா சோப்ராவின் தி பிளப் ஓடிடியில் வெளியானது | விஜய் தேவரகொண்டா, ராஷ்மிகாவுக்கு திருமண வாழ்த்து தெரிவித்த பிரதமர் மோடி | மார்ச் 6ல் ‛ஓ பட்டர்பிளை' ரிலீஸ் | ஜி.வி.பிரகாஷின் புதிய படங்கள் குறித்து தகவல் இதோ | பிளாஷ்பேக்: ஒரே படக்கதை; வெற்றியை சுவைத்த எம் கே ராதா... வீழ்ச்சியைக் கண்ட எம் ஜி ஆர் | ஆர்யா படத்தில் நடிக்கமாட்டேன்: அபர்ணதி சொன்னது ஏன்? | ஓடிடியிலும் வரவேற்பு பெற்ற ஆட்டோகிராப் : சேரன் மகிழ்ச்சி | 'தாய்கிழவி' நல்ல லாபம்; அடுத்தடுத்து படங்களை தயாரிக்கும் சிவகார்த்திகேயன் | சூரி, ரவிக்குமார் படத்தின் கதை என்ன தெரியுமா... |

பஞ்சு அருணாசலம் திரைக்கதை எழுதி, தயாரித்த படம் குரு சிஷ்யன். இந்தப் படத்தில்தான் கவுதமி அறிமுகமானார். இன்னொரு ஜோடியாக பிரபுவும் சீதாவும் நடித்தார்கள். ரவிச்சந்திரன், ராதாரவி, சோ, பாண்டியன், வினு சக்ரவர்த்தி என பலர் நடித்தார்கள். இளையராஜா இசை அமைத்தார். எஸ்.பி.முத்துராமன் இயக்கினார்.
ரஜினிக்கு எப்போதுமே நடிகர் திலகம் சிவாஜி மீதும், அவரது குடும்பத்தினர் மீதும் தனி மரியாதை உண்டு. அதனால்தான் சந்திரமுகியில் நடித்துக் கொடுத்த அந்த குடும்பத்திற்கு பொருளாதார ரீதியாக பெரிய உதவி செய்தார்.
குரு சிஷ்யன் படத்தில் ரஜினி குரு, பிரபு சிஷ்யன். கதைப்படி, ஒருகாட்சியில் பிரபுவுக்கு சண்டை காட்சி எதுவும் இல்லை. ஆனால் ரஜினி, பிரபுவுக்கு ஒரு சண்டை காட்சி வைக்கச் சொன்னார். அதற்கு இயக்குனர் எஸ்.பி.முத்துராமன் கதையில் அதற்கு இடமில்லையே என்றார். எனது சண்டை காட்சி ஒன்றை பிரபுவுக்கு கொடுங்கள், கடைசி நேரத்தில் நான் சண்டையில் என்ட்ரி கொடுக்கிறேன். கதைக்கு சரியாக வரும் என்றார். எஸ்.பி.முத்துராமனும் அப்படியே செய்தார்.
படத்திற்கு ரஜினி 23 நாள் கால்ஷீட் கொடுத்திருந்தார். படப்பிடிப்பு மைசூரில் நடந்து கொண்டிருந்தது. அப்போது சீதா பிசியான நடிகையாக இருந்ததால் அவர் கால்ஷீட் கிடைப்பது பிரச்னையாக இருந்தது. இடையில் சீதாவின் 2 நாள் கால்ஷீட் கிடைத்தது. ரஜினிக்கு ஒதுக்கிய நாளில் பிரபு, சீதா பாடல் காட்சியை படம்பிடிக்க முடிவு செய்தார் எஸ்.பி.முத்துராமன், விஷயத்தை ரஜினியிடம் சொல்லி "இரண்டு நாள் ஓய்வெடுங்கள், அல்லது சென்னை சென்று வாருங்கள், இந்த இரண்டு நாளும் நீங்கள் நடித்ததாக கால்ஷீட் கணக்கில் வைத்துக் கொள்கிறோம்" என்றார். ரஜினியும் ஒப்புக் கொண்டார்.
மறுநாள் மைசூர் அரண்மனையில் பிரபு, சீதா பாடல் காட்சி படமாக்கப்பட்டது. அந்த பாடல் காட்சிக்கு புதிதாக ஒருவர் தலையில் மப்ளர் கட்டிக்கொண்டு டிராலி தள்ளிக்கொண்டிருந்தார். "யாருப்பா அது புதுசா இருக்கு" என்று எஸ்.பி.முத்துராமன் அருகில் சென்று விசாரித்தார். மப்ளரை கழட்டினால்... ரஜினி.
"என்ன ரஜினி நீங்க இப்படி...?" என்றார் அதிர்ச்சியுடன். "சார் நான் வேலை பார்க்காவிட்டாலும் இன்னிக்கு நீங்க எனக்கு சம்பளம் தர்றீங்க. ஆனால் என்னால் வேலை செய்யாமல் சம்பளம் வாங்க முடியாது. இதுவும் ஒரு வேலைதானே. அதை செய்ய விடுங்கள்" என்றார். இரண்டு நாளும் படப்பிடிப்புக்கு தேவையான உதவி வேலைகளை செய்தார் ரஜினி.