Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

பிளாஷ்பேக்: பிரபு பாடல் காட்சிக்கு டிராலி தள்ளிய ரஜினி

08 நவ, 2016 - 03:01 IST
எழுத்தின் அளவு:
Flashback-:-Rajini-move-Trolly-for-Prabhu

பஞ்சு அருணாசலம் திரைக்கதை எழுதி, தயாரித்த படம் குரு சிஷ்யன். இந்தப் படத்தில்தான் கவுதமி அறிமுகமானார். இன்னொரு ஜோடியாக பிரபுவும் சீதாவும் நடித்தார்கள். ரவிச்சந்திரன், ராதாரவி, சோ, பாண்டியன், வினு சக்ரவர்த்தி என பலர் நடித்தார்கள். இளையராஜா இசை அமைத்தார். எஸ்.பி.முத்துராமன் இயக்கினார்.


ரஜினிக்கு எப்போதுமே நடிகர் திலகம் சிவாஜி மீதும், அவரது குடும்பத்தினர் மீதும் தனி மரியாதை உண்டு. அதனால்தான் சந்திரமுகியில் நடித்துக் கொடுத்த அந்த குடும்பத்திற்கு பொருளாதார ரீதியாக பெரிய உதவி செய்தார்.


குரு சிஷ்யன் படத்தில் ரஜினி குரு, பிரபு சிஷ்யன். கதைப்படி, ஒருகாட்சியில் பிரபுவுக்கு சண்டை காட்சி எதுவும் இல்லை. ஆனால் ரஜினி, பிரபுவுக்கு ஒரு சண்டை காட்சி வைக்கச் சொன்னார். அதற்கு இயக்குனர் எஸ்.பி.முத்துராமன் கதையில் அதற்கு இடமில்லையே என்றார். எனது சண்டை காட்சி ஒன்றை பிரபுவுக்கு கொடுங்கள், கடைசி நேரத்தில் நான் சண்டையில் என்ட்ரி கொடுக்கிறேன். கதைக்கு சரியாக வரும் என்றார். எஸ்.பி.முத்துராமனும் அப்படியே செய்தார்.


படத்திற்கு ரஜினி 23 நாள் கால்ஷீட் கொடுத்திருந்தார். படப்பிடிப்பு மைசூரில் நடந்து கொண்டிருந்தது. அப்போது சீதா பிசியான நடிகையாக இருந்ததால் அவர் கால்ஷீட் கிடைப்பது பிரச்னையாக இருந்தது. இடையில் சீதாவின் 2 நாள் கால்ஷீட் கிடைத்தது. ரஜினிக்கு ஒதுக்கிய நாளில் பிரபு, சீதா பாடல் காட்சியை படம்பிடிக்க முடிவு செய்தார் எஸ்.பி.முத்துராமன், விஷயத்தை ரஜினியிடம் சொல்லி "இரண்டு நாள் ஓய்வெடுங்கள், அல்லது சென்னை சென்று வாருங்கள், இந்த இரண்டு நாளும் நீங்கள் நடித்ததாக கால்ஷீட் கணக்கில் வைத்துக் கொள்கிறோம்" என்றார். ரஜினியும் ஒப்புக் கொண்டார்.


மறுநாள் மைசூர் அரண்மனையில் பிரபு, சீதா பாடல் காட்சி படமாக்கப்பட்டது. அந்த பாடல் காட்சிக்கு புதிதாக ஒருவர் தலையில் மப்ளர் கட்டிக்கொண்டு டிராலி தள்ளிக்கொண்டிருந்தார். "யாருப்பா அது புதுசா இருக்கு" என்று எஸ்.பி.முத்துராமன் அருகில் சென்று விசாரித்தார். மப்ளரை கழட்டினால்... ரஜினி.


"என்ன ரஜினி நீங்க இப்படி...?" என்றார் அதிர்ச்சியுடன். "சார் நான் வேலை பார்க்காவிட்டாலும் இன்னிக்கு நீங்க எனக்கு சம்பளம் தர்றீங்க. ஆனால் என்னால் வேலை செய்யாமல் சம்பளம் வாங்க முடியாது. இதுவும் ஒரு வேலைதானே. அதை செய்ய விடுங்கள்" என்றார். இரண்டு நாளும் படப்பிடிப்புக்கு தேவையான உதவி வேலைகளை செய்தார் ரஜினி.


Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - வெயில்மறக்க முடியுமா? - வெயில் மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,சரத்குமார்
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    Tamil New Film Kallapart
    • கள்ளபார்ட்
    • நடிகர் : அரவிந்த் சாமி
    • நடிகை : ரெஜினா
    • இயக்குனர் :ராஜபாண்டி
    Tamil New Film Party
    • பார்ட்டி
    • நடிகர் : ஜெய் ,சரத்குமார்,சந்திரன் (கயல்)
    • நடிகை : ரெஜினா ,நிவேதா பெத்ராஜ்
    • இயக்குனர் :வெங்கட் பிரபு
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2025 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in