‛ஆனந்த ராகம்...' பாடிய பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார் | ஒரு பாடலுக்கு நடனம் : விஜய் படத்தை நிராகரித்த ஸ்ரீ லீலா | இயக்குனருடன் சண்டை : படப்பிடிப்பை நிறுத்திய சவுந்தர்யா ரஜினிகாந்த் | மலையாளத்தில் மட்டுமே வெளியான நிவின்பாலி படம் | மூன்று வாரம் முன்கூட்டியே ரிலீசாகும் மம்முட்டியின் டர்போ | 100 கிலோ எடை தூக்கிய ராஷ்மிகா மந்தனா | நடிகை பிரக்யா நக்ராவை திருமணம் செய்தாரா ஜெய்? | அஜித்தின் 53வது பிறந்தநாள் : பரிசாக பைக் வழங்கிய ஷாலினி | தனி வீடு வாங்கிய ஐஸ்வர்யா ரஜினிகாந்த் | குக் வித் கோமாளியில் என்ட்ரி கொடுக்கும் அக்ஷய் கமல் |
திருக்குமரன் என்டர்டெயின்மெண்ட் சார்பில் சி.வி.குமார் தயாரிக்கும் படம் அதே கண்கள். கலையரசன், ஜனனி அய்யர், ஷிவதா, பால சரவணன் நடிக்கிறார்கள். ரோஹின் வெங்கடேசன் இயக்குகிறார். ரவிவர்மன் நீலமேகம் ஒளிப்பதிவு செய்கிறார். ஜிப்ரான் இசை அமைக்கிறார். இதன் படப்பிடிப்புகள் இறுதி கட்டத்தை நெருங்கி உள்ளது.
படத்தை பற்றி இயக்குனர் ரோஹின் வெங்கடேசன் கூறியதாவது: இது காதலும் திகிலும் கலந்த ரொமாண்டிக் த்ரில்லர் படம். இதில் பார்வையற்றவராக கலையரசன் நடிக்கிறார். பின்னர் அவருக்கு பார்வை கிடைக்கிறது. பார்வை இருக்கும் வரை கலையரசன், ஜனனி, ஷிவதாவின் முக்கோண காதலாக நகரும் கதை. பார்வை வந்ததும் திரில்லராக மாறும் வித்தியாசமான திரைக்கதை. பாலசரவணன் முக்கியமான கேரக்டரில் நடித்துள்ளார். கதையை நகர்த்திச் செல்வதே அவரது கேரக்டர்தான். படத்தின் பின்னணி இசைக்கு ஜிப்ரான் ரொம்பவே மெனக்கெட்டிருக்கிறார். ஒரு பாடல் காட்சி தவிர மற்ற படப்பிடிப்புகள் அனைத்தும் முடிந்து விட்டது. அடுத்த வாரம் பாடல் காட்சி படப்பிடிப்பு நடக்கிறது. என்றார் ரோஹின் வெங்கடேசன்.