போஜ்புரி நடிகை தற்கொலை : இறப்புக்கு முன் வெளியிட்ட பதிவு | செப்டம்பர் 27ல் திரைக்கு வரும் அமரன் | புத்திகெட்டு திரிந்தால்தான் புத்தி வரும் : செல்வராகவன் | தக்லைப் படத்தில் இணைந்த இரண்டு பாலிவுட் நடிகர்கள் | இளையராஜா பற்றி இனி பேசினால் நடப்பதே வேறு : வைரமுத்துவை எச்சரித்த கங்கை அமரன் | ஆன்மிகப் பயணத்தால் மாறிய வாழ்க்கை : ரம்யா பாண்டியன் வெளியிட்ட பதிவு | அஜித் படத்தில் இணையும் இளம் நடிகை | மே 17ல் ரிலீஸ் ஆகும் எலக்சன் படம் | ஆளைக் கொல்லும் நடிப்பு : பஹத் பாசிலுக்கு நயன்தாரா பாராட்டு | துருவா சார்ஜா வீட்டு விழாவில் குடும்பத்துடன் பங்கேற்ற சஞ்சய் தத் |
தென்னிந்திய மொழிகளில் பரவலாக நடித்து வருபவர் பூர்ணா. மலையாள நடிகையான இவர், தமிழில் பல படங்களில் கதாநாயகியாக நடித்துள்ளார். அதோடு அருள்நிதி நடித்த தகராறு படத்தில் நெகடீவ் ரோலிலும் நடித்தார். ஆனால் அவர் உயிரைக்கொடுத்து நடித்தபோதும் அவரது நடிப்புக்கு பெரிதாக அங்கீகாரம் கிடைக்கவில்லை. இந்த நிலையில், இதுவரை இளவட்ட நாயகியாக நடித்து வந்த பூர்ணா, மணல் கயிறு-2 படத்தில் திருமணமான பெண்ணாகவும், சவரக்கத்தியில் 2 பிள்ளைகளுக்கு அம்மாவாகவும் நடித்துள்ளார்.
இதுபற்றி பூர்ணா கூறுகையில், மணல்கயிறு-2 படத்தில் என்னைச்சுற்றித்தான் டோட்டல் கதையே செல்கிறது. அழுத்தமான நாயகியாக நடித்துள்ளேன். அதேபோல் சவரக்கத்தியில் சவரத்தொழிலாளியாக நடித்துள்ள ராமின் மனைவியாக நடித்துள்ளேன். ஒரு பையன், ஒரு பொண்ணு, வயிற்றில் ஒரு குழந்தை என மூன்று பிள்ளைகளுக்கு அம்மாவாக நடித்துள்ளேன். இந்த படத்தில் கர்ப்பிணியாக நடித்தது ரொம்ப நல்ல அனுபவம். அதோடு, அந்த பிள்ளைகள் என்னை அம்மா அம்மா என்று அழைத்தபோது தாய்மையின் உன்னதத்தை உணர்ந்தேன். இத்தனை ஆண்டுகள் நடித்தில் இந்த படம்தான் எனக்கு மனதளவில் பெரிய திருப்தியை கொடுத்துள்ளது என்கிறார் பூர்ணா.