தயாரிப்பு நிறுவனம் தொடங்கிய நெல்சன் | நாக சைதன்யா, பூஜா ஹெக்டேவை இயக்கும் விருபாக்ஷா இயக்குனர் | ஜூன் 13ல் வெளியாகும் ‛இந்தியன் 2' | தெலுங்கிற்கே முன்னுரிமை தரும் 'குபேரா' குழு | ஒரு அப்டேட் கூட வரவில்லை, வருத்தத்தில் அஜித் ரசிகர்கள் | இளம் இசையமைப்பாளர் பிரவீண் குமார் மரணம் | ஏப்ரல் மாதத்திலும் தொடர்ந்த ஏமாற்றம் - 2024 ஏப்ரல் படங்கள் ஓர் பார்வை | ‛ஆனந்த ராகம்' பாடிய அபூர்வ குரல் உமா ரமணன் காலமானார் | ஒரு பாடலுக்கு நடனம் : விஜய் படத்தை நிராகரித்த ஸ்ரீ லீலா | இயக்குனருடன் சண்டை : படப்பிடிப்பை நிறுத்திய சவுந்தர்யா ரஜினிகாந்த் |
பிரபல பின்னணி பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியத்திற்கு இந்தியின் பிலிம் பெர்சனாலிட்டி விருது அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான அறிவிப்பை மத்திய அமைச்சர் வெங்கையா நாயுடு வெளியிட்டுள்ளார்.
1966ம் ஆண்டு வெளிவந்த தெலுங்குப் படமான ஸ்ரீஸ்ரீஸ்ரீ மரியாதை ராமண்ணா படத்தில் இவரை பாடகராக அறிமுகப்படுத்தியவர் இசையமைப்பாளர் கோதண்டபாணி. தமிழில் எம்ஜிஆர் நடித்த அடிமைப் பெண் படத்தில் பாடிய ஆயிரம் நிலவே வா... பாடலே முதல் பாடலாக வெளிவந்தது. அன்றிலிருந்து இன்று வரை எத்தனையோ பாடல்களை பல இசையமைப்பாளர்களின் இசையில் பாடியிருக்கிறார். பல முன்னணி நடிகர்களுக்கும் சிறிய நடிகர்களுக்கும் கூட பாடியிருக்கிறார். தமிழ், தெலுங்கில் மட்டுமல்லாது பல இந்திய மொழிகளிலும் பல அருமையான பாடல்களைப் பாடி இசை ரசிகர்கள் மனதில் நீங்காத இடத்தைப் பெற்றிருப்பவர். இதுவரை சுமார் 40000 பாடல்களுக்கும் மேல் பாடியிருக்கிறார்.
இந்நிலையில் மத்திய அரசு, எஸ்பிபிக்கு., இந்தியன் பிலிம் பெர்சனாலிட்டி விருதை அறிவித்துள்ளது. கோவாவில் நடக்கும் 47-வது சர்வதேச திரைப்பட விழாவில் அவருக்கு இந்த விருது வழங்கப்படும் என மத்திய அமைச்சர் வெங்கையா நாயுடு தெரிவித்திருக்கிறார்.
விருது குறித்து எஸ்பிபி கூறுகையில், விருது அறிவிக்கப்பட்டுள்ளது மகிழ்ச்சி அளிக்கிறது. இந்த விருது கிடைக்க காரணமாக இருந்த அனைவருக்கும் நன்றி. குறிப்பாக கலைத்துறையினர் மற்றும் மத்திய அரசுக்கு நன்றி என்று கூறியுள்ளார்.