‛ஆனந்த ராகம்...' பாடிய பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார் | ஒரு பாடலுக்கு நடனம் : விஜய் படத்தை நிராகரித்த ஸ்ரீ லீலா | இயக்குனருடன் சண்டை : படப்பிடிப்பை நிறுத்திய சவுந்தர்யா ரஜினிகாந்த் | மலையாளத்தில் மட்டுமே வெளியான நிவின்பாலி படம் | மூன்று வாரம் முன்கூட்டியே ரிலீசாகும் மம்முட்டியின் டர்போ | 100 கிலோ எடை தூக்கிய ராஷ்மிகா மந்தனா | நடிகை பிரக்யா நக்ராவை திருமணம் செய்தாரா ஜெய்? | அஜித்தின் 53வது பிறந்தநாள் : பரிசாக பைக் வழங்கிய ஷாலினி | தனி வீடு வாங்கிய ஐஸ்வர்யா ரஜினிகாந்த் | குக் வித் கோமாளியில் என்ட்ரி கொடுக்கும் அக்ஷய் கமல் |
வாகை சூடவா இனியாவுக்கு சமீபகாலமாக கதாநாயகி வாய்ப்புகள் கிடைப்பதில்லை. அதனால் சென்னையில் ஒருநாள் படத்தில் இருந்து கேரக்டர் நடிகையாக மாறி விட்டார். அந்த வகையில் தற்போது வெளியாகியுள்ள திரைக்கு வராத கதை படத்தில் முக்கிய வேடத்தில் நடித்துள்ள இனியா, தெலுங்கு, மலையாளத் திலும் சில படங்களில் முக்கிய வேடங்களில் நடித்து வருகிறார்.
இதுபற்றி இனியா கூறுகையில், சினிமாவில் கதாநாயகி வாய்ப்புகள் கிடைக்காதது குறித்து நான் பெரிதாக பீல் பண்ணவில்லை. மாறாக, கேரக்டர் நடிகையாக நீண்டகாலம் வலம்வர முடிவெடுத்துள்ளேன். அதனால்தான் அழுத்தமான கேரக்டர்களை தேடிப்பிடித்து நடிக்கிறேன். தற்போது தமிழில் பொட்டு, காதல் சொல்ல நேரமில்லை, ரெண்டாவது படம், வைகை எக்ஸ்பிரஸ் என பல படங்க ளில் நடிக்கிறேன். இந்த படங்களில் குறைவான நேரமே வந்தாலும் ரசிகர்களின் மனதில் இடம்பிடிப்பேன்.
என்னைப்பொறுத்தவரை படம் பார்த்து விட்டு தியேட்டரைவிட்டு வெளியே வரும் ரசிகர்களின் மனதில் நான் நடித்த கதாபாத்திரம் நிற்க வேண்டும். அது எனக்கு போதும். அதனால்தான் என்னை புக் பண்ண வரும் டைரக்டர்களிடம் கதையை கேட்டு நடிக்கிறேன். வாய்ப்பு வேண்டும் என்பதற்காக கண்மூடித்தன மாக எந்த படத்திலும் நான் கமிட்டாவதில்லை என்கிறார் இனியா.