‛ஆனந்த ராகம்...' பாடிய பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார் | ஒரு பாடலுக்கு நடனம் : விஜய் படத்தை நிராகரித்த ஸ்ரீ லீலா | இயக்குனருடன் சண்டை : படப்பிடிப்பை நிறுத்திய சவுந்தர்யா ரஜினிகாந்த் | மலையாளத்தில் மட்டுமே வெளியான நிவின்பாலி படம் | மூன்று வாரம் முன்கூட்டியே ரிலீசாகும் மம்முட்டியின் டர்போ | 100 கிலோ எடை தூக்கிய ராஷ்மிகா மந்தனா | நடிகை பிரக்யா நக்ராவை திருமணம் செய்தாரா ஜெய்? | அஜித்தின் 53வது பிறந்தநாள் : பரிசாக பைக் வழங்கிய ஷாலினி | தனி வீடு வாங்கிய ஐஸ்வர்யா ரஜினிகாந்த் | குக் வித் கோமாளியில் என்ட்ரி கொடுக்கும் அக்ஷய் கமல் |
சேது, காசி, பிதாமகன், சாமி, அந்நியன் ஆகிய படங்களில் விக்ரமின் கேரியரில் முக்கியமானவை. ஆனால் அப்படி அவர் நடித்த எந்த ஹிட் படத்தின் இரண்டாம் பாகமும் தொடங்கப்படாத நிலையில், டைரக்டர் ஹரி மட்டும் சாமி படத்தின் இரண்டாம் பாகத்தை தொடங்கப்போவதாக அறிவித்துள்ளார். தற்போது சூர்யா நடிப்பில் சிங்கம்-3 படத்தை இயக்கி வரும் ஹரி, அப்படத்தை முடித்ததும் விக்ரமை வைத்து சாமி-2 படத்தை இயக்குவார் என்றுதான் இதுவரை செய்திகள் வெளியாகி வந்தன. ஆனால், இப்போது சம்பந்தப்பட்டவர்களை விசாரித்தபோது, சாமி-2 படப்பிடிப்பு அடுத்த ஆண்டு ஜூன் மாதம்தான் தொடங்கயிருப்பதாக சொல்கிறார்கள்.
அதற்கு இன்னொரு காரணமும் உள்ளது. ஏற்கனவே ஜீவா நடித்த சிங்கம்புலி படத்தை தயாரித்த நிறுவனத்துக்கு கருடா என்ற படத்தில் நடிக்க அட்வான்ஸ் வாங்கியிருந்தார் விக்ரம். ஆனால், படத்தை இயக்கயிருந்த திருவுக்கும், தயாரிப்புத்துறைக்கும் ஏதோ மனஸ்தாபம் ஏற்பட கருடா படம் ட்ராப் செய்யப்பட்டது. இருப்பினும், அந்நிறுவனம் விக்ரமை வைத்து அதே கால்சீட்டில் இன்னொரு படம் தயாரிக்க முடிவெடுத்து தற்போது பல டைரக்டர்களிடம் தீவிரமாக கதை கேட்டு வருகிறது. அதோடு, தங்களுக்கு கால்சீட் கொடுத்தபடி நடித்த பிறகுதான் வேறு படங்களில் நடிக்க வேண்டும் என்றும் விக்ரமை கேட்டுக்கொள்ளப்பட் டுள்ளதாம். அதற்கு அவரும் சம்மதம் சொல்லியிருக்கிறாராம். ஆக, ஜூன் மாதம் சாமி-2வில் நடிப்பதற்கு முன்பாக இன்னொரு படத்தில் விக்ரம் நடித்து முடித்து விடுவார் என்று தெரிகிறது.