போஜ்புரி நடிகை தற்கொலை : இறப்புக்கு முன் வெளியிட்ட பதிவு | செப்டம்பர் 27ல் திரைக்கு வரும் அமரன் | புத்திகெட்டு திரிந்தால்தான் புத்தி வரும் : செல்வராகவன் | தக்லைப் படத்தில் இணைந்த இரண்டு பாலிவுட் நடிகர்கள் | இளையராஜா பற்றி இனி பேசினால் நடப்பதே வேறு : வைரமுத்துவை எச்சரித்த கங்கை அமரன் | ஆன்மிகப் பயணத்தால் மாறிய வாழ்க்கை : ரம்யா பாண்டியன் வெளியிட்ட பதிவு | அஜித் படத்தில் இணையும் இளம் நடிகை | மே 17ல் ரிலீஸ் ஆகும் எலக்சன் படம் | ஆளைக் கொல்லும் நடிப்பு : பஹத் பாசிலுக்கு நயன்தாரா பாராட்டு | துருவா சார்ஜா வீட்டு விழாவில் குடும்பத்துடன் பங்கேற்ற சஞ்சய் தத் |
சூப்பர் ஸ்டார் ரஜினிக்கு ஒரு திரைப்படம் தயாரிக்க வேண்டும் என்பது நீண்ட நாள் கனவாக இருந்தது. ஒரு படம் தயாரித்தால் அது பிரமாண்டமாகவும், பேசப்படுவதாகவும் இருக்க வேண்டும் என்று நினைத்தார். அப்போது இந்தியில் அமிதாப்பச்சன் நடித்த மர்த் என்ற படம் பெரிய வெற்றி பெற்றிருந்தது. அந்தப் படத்தையே தமிழில் ரீமேக் செய்ய விரும்பினார். ஆர்.கே.புரடக்ஷன் என்ற தயாரிப்பு நிறுவனத்தை தொடங்கி மாவீரன் என்ற பெயரில் இந்தப் படத்தை தயாரித்தார். அமிதாப்பச்சன் நடித்த கேரக்டரில் ரஜினி நடித்தார். அவருடன் அம்பிகா, ஜெய்சங்கர், சுஜாதா நடித்தார்கள். பிரபல குத்துச் சண்டை வீரர் தாராசிங் ரஜினியின் தந்தையாக நடித்தார். அப்போது தொடர்ந்து வெற்றிப் படங்களை கொடுத்துக் கொண்டிருந்த ராஜசேகர் இயக்கினார்.
ஆங்கிலேயர் காலத்து கதை. சேதுபதி ஜமீன், ஆங்கிலேயர்களை எதிர்த்து போராடுகிறார். இதனால் ஆங்கிலேயர்கள் சேதுபதி ஜமீனை அழிக்க பார்க்கிறார்கள். தப்பி ஓடும் சேதுபதி காட்டிற்குள் மனைவி குழந்தையுடன் வாழ்கிறார். அவரை ஜமீன் மருத்துவர் காட்டிக் கொடுக்கிறார். மனைவி குழந்தைகளை தப்பி ஓடவிடும் சேதுபதி, ஆங்கிலேயர்களால் கைது செய்யப்பட்டு பாதாள சிறையில் அடைக்கப்படுகிறார். தப்பி ஓடிய தாயும் மகனும் ஒரு கிராமத்தில் வாழ்கிறார்கள். தாய் பைத்தியமாகிறாள். மகனை ஒரு குதிரை வண்டிகாரனும், அவன் மனைவியும் வளர்க்கிறார்கள். வளர்ந்து ஆளான சேதுபதி மகன் எப்படி எதிரிகளை பழிவாங்குகிறார் என்கிற கதை. சேதுபதி ஜமீனாக தாராசிங் நடித்தார். அம்மாவாக சுஜாதா நடித்தார் இளையராஜாவின் இசையில் பாடல்கள் பிரமாதமான வெற்றியை பெற்றது. ஆனால் படம் எதிர்பார்த்த அளவுக்கு வெற்றி பெறவில்லை.