போஜ்புரி நடிகை தற்கொலை : இறப்புக்கு முன் வெளியிட்ட பதிவு | செப்டம்பர் 27ல் திரைக்கு வரும் அமரன் | புத்திகெட்டு திரிந்தால்தான் புத்தி வரும் : செல்வராகவன் | தக்லைப் படத்தில் இணைந்த இரண்டு பாலிவுட் நடிகர்கள் | இளையராஜா பற்றி இனி பேசினால் நடப்பதே வேறு : வைரமுத்துவை எச்சரித்த கங்கை அமரன் | ஆன்மிகப் பயணத்தால் மாறிய வாழ்க்கை : ரம்யா பாண்டியன் வெளியிட்ட பதிவு | அஜித் படத்தில் இணையும் இளம் நடிகை | மே 17ல் ரிலீஸ் ஆகும் எலக்சன் படம் | ஆளைக் கொல்லும் நடிப்பு : பஹத் பாசிலுக்கு நயன்தாரா பாராட்டு | துருவா சார்ஜா வீட்டு விழாவில் குடும்பத்துடன் பங்கேற்ற சஞ்சய் தத் |
தமிழ் நடிகர்களில் மிகவும் வித்தியாசமானர் குருசோமசுந்தரம். கூத்துப் பட்டறையில் நடிப்பு பயின்று இப்போதும் மேடை நாடகத்தில், தெருநாடகத்தில் நடித்து வருகிறார். ஆரண்ய காண்டம் படத்தின் மூலம் சினிமாவுக்கு அறிமுகமான குருசோமசுந்தரம், அதன் பிறகு கடல், பாண்டியநாடு, ஜிகிர்தண்டா, 49ஓ, தூங்காவனம், குற்றமே தண்டனை படங்களில் நடித்தார். என்றாலும் அவரை அடையாளம் காட்டியது ஜோக்கர். அதில் அவர் கதையின் நாயகான நடித்தார்.
குருசோமசுந்தரம் திருவண்ணாமலை அருகே உள்ள கனத்தம்பூண்டி என்ற கிராமத்தில் சிறிய வாடகை வீட்டில் வசித்து வருகிறார். படப்பிடிப்பு இல்லாத நாட்களில் அங்கேயே தங்கியிருந்து விவசாய கூலி வேலைக்குச் சென்று வருகிறார். தற்போது சினிமாவில் நடித்து கொஞ்சம் காசு சேர்த்து அதை வைத்து சொந்த நிலம் வாங்கி விவசாயம் செய்ய முடிவு செய்திருக்கிறார். "நான் வயலும் வயல் சார்ந்த வாழ்க்கையை நேசிக்கிறேன். விவசாய கூலி வேலைக்குச் செல்வது வெறும் கூலிக்காக அல்ல, ஆத்ம திருப்திக்காக. சினிமாவில் பெரிய ஆளாக மாறினாலும் நான் ஒரு விவசாயி என்ற அடையாளத்தோடு வாழவே விரும்புகிறேன்" என்கிறார் குரு சோமசுந்தரம்.