போட்டோ சூட் நடத்திய நிறைமாத கர்ப்பிணி அமலா பால் | அரிவாளுடன் விக்ரம் நிற்கும் வீர தீர சூரன் போஸ்டர் : போலீசுக்கு பறந்த புகார் | குழந்தை பிறப்பை தள்ளி போடாதீர்கள் - சீரியல் நடிகை ஜூலி அட்வைஸ் | 100 நாட்களைக் கடந்த ‛வேட்டையன்' படப்பிடிப்பு | வில்லன் நடிகருடன் பிரேக்கப்பா? - புகைப்படம் மூலம் முற்றுப்புள்ளி வைத்த காதலி | இறுதிக்கட்ட படப்பிடிப்பில் திரிஷாவின் ஐடென்டிட்டி | ஜப்பானில் வெளியாகும் 777 சார்லி ரிலீஸ் தேதி அறிவிப்பு | பவன் கல்யாண் பட டைட்டிலில் சமந்தா நடிக்கும் புதிய படம் | 7 ஆண்டுகளுக்கு பிறகு திரையில் வருகிறார் அதிதி பொஹங்கர் | மேக்-அப் அறையில் அடைத்து சித்ரவதை : டிவி நடிகை பரபரப்பு புகார் |
இயக்குனர் பி.வாசு கன்னடத்தில் இயக்கிய படம் சிவலிங்கா. சிவராஜ்குமார், வேதிகா, வாசு மகன் ஷக்தி நடித்திருந்தனர். தற்போது இந்தப் படத்தை அதே பெயரில் தமிழில் ரீமேக் செய்கிறார் பி.வாசு. ராகவா லாரன்ஸ், இறுதிசுற்று ரித்விகா சிங் நடிக்கிறார்கள். வாசு மகன் ஷக்தியும் நடிக்கிறார். டிரைன்ட் ஆர்ட்ஸ் சார்பில் ஆர்.ரவீந்திரன் தயாரிக்கிறார்.
கன்னட சிவலிங்காவின் ஒரு போர்ஷன் படப்பிடிப்பு மைசூர் அரண்மனையில் நடந்தது. அது போன்று ரீமேக் படத்தின் படப்பிடிப்பையும் மைசூர் அரண்மனையிலேயே நடத்த வாசு திட்டமிட்டிருந்தார். இதற்கான ஏற்பாடுகளும் நடந்தது. படப்பிடிப்பு தொடங்கும் நேரத்தில் காவிரி பிரச்சினை தொடர்பான கலவரம் கர்நாடகத்தில் ஏற்பட்டதால் படப்பிடிப்பில் பிரச்சினை வரலாம் என்று கருதிய அரண்மனை நிர்வாகம் படப்பிடிப்புக்கு அனுமதி தர மறுத்து விட்டது. சுமூகமான சூழ்நிலை உருவாகும் வரை காத்திருக்க முடியாது.
இதனால் வேறு வழியில்லாமல் சென்னையில் மைசூர் அரண்மனையின் வெளித் தோற்றத்தையும், லலித் மஹாலின் உள் தோற்றத்தையும் செட் அமைத்து படப்பிடிப்பு நடத்தி வருகிறார்கள். இந்த செட்டிற்கு மட்டும் சுமார் ஒரு கோடி ரூபாய் செலவாகியிருப்பதாக கூறப்படுகிறது. மைசூர் அரண்மனையில் படப்பிடிப்பு நடத்தியிருந்தால் அதன் வாடகை இதை விட பல மடங்கு குறைவாக இருந்திருக்கும் என்கிறார்கள்.