போஜ்புரி நடிகை தற்கொலை : இறப்புக்கு முன் வெளியிட்ட பதிவு | செப்டம்பர் 27ல் திரைக்கு வரும் அமரன் | புத்திகெட்டு திரிந்தால்தான் புத்தி வரும் : செல்வராகவன் | தக்லைப் படத்தில் இணைந்த இரண்டு பாலிவுட் நடிகர்கள் | இளையராஜா பற்றி இனி பேசினால் நடப்பதே வேறு : வைரமுத்துவை எச்சரித்த கங்கை அமரன் | ஆன்மிகப் பயணத்தால் மாறிய வாழ்க்கை : ரம்யா பாண்டியன் வெளியிட்ட பதிவு | அஜித் படத்தில் இணையும் இளம் நடிகை | மே 17ல் ரிலீஸ் ஆகும் எலக்சன் படம் | ஆளைக் கொல்லும் நடிப்பு : பஹத் பாசிலுக்கு நயன்தாரா பாராட்டு | துருவா சார்ஜா வீட்டு விழாவில் குடும்பத்துடன் பங்கேற்ற சஞ்சய் தத் |
தமிழில் சிங்கம்-3 படத்தில் நடித்து வரும் அனுஷ்கா, தெலுங்கில் பாகுபலி-2, பாஹ்மதி, ஓம் நமோ வெங்கடேசாய ஆகிய படங்களில் நடித்து வருகிறார். இப்படி ஒரே நேரத்தில் மூன்று படங்களில் நடிப்பதினால்தான் அஜித்தின் 57வது படத்தில் நடிக்க அவரால் கால்சீட் கொடுக்க முடியவில்லை. அதேபோல், சிரஞ்சீவியின் 150 வது படத்தில் முதலில் நடிப்பதாக இருந்த அனுஷ்கா பின்னர் அந்த படத்தில் தன்னால் நடிக்க முடியாது என்று வெளியேறி விட்டார். அதன்பிறகுதான் அனுஷ்கா மறுத்த அஜீத் படத்தில் கமிட்டான காஜல்அகர்வால், சிரஞ்சீவியின் படத்திலும் கமிட்டானார். ஆக, அனுஷ்காவுக்கான இரண்டு படங்கள் காஜலுக்கு கைமாறியது.
ஆனால் இந்த படங்களில் அனுஷ்கா நடிக்க முடியாமல் போனதற்கு முக்கிய காரணம் தெலுங்கில் நாகார்ஜூனாவுடன் நடிக்கும் ஓம் நமோ வெங்கடேசாய படம்தானாம். தன்னை சினிமாவுக்கு கொண்டு வந்தவர் நாகார்ஜூனா என்பதால், அவர் தன்னுடன் அந்த படத்தில் கண்டிப்பாக நடிக்க வேண்டும் என்று அனுஷ்காவுக்கு அழைப்பு விடுத்தபோது அவரால் மறுக்க இயலவில்லையாம். அதன்காரணமாகத்தான் அஜித் படம் மட்டுமின்றி சிரஞ்சீவியின் 150 வது படத்திலும் நடிப்பதாக முதலில் சொல்லியிருந்த அனுஷ்கா பின்னர் விலகிக்கொண்டாராம்.