ரெட்ட தல படப்பிடிப்பு துவங்கியது | எவரெஸ்ட் சிகரத்திற்கு டிரக்கிங் சென்ற ஜோதிகா | போட்டோ சூட் நடத்திய நிறைமாத கர்ப்பிணி அமலா பால் | அரிவாளுடன் விக்ரம் நிற்கும் வீர தீர சூரன் போஸ்டர் : போலீசுக்கு பறந்த புகார் | குழந்தை பிறப்பை தள்ளி போடாதீர்கள் - சீரியல் நடிகை ஜூலி அட்வைஸ் | 100 நாட்களைக் கடந்த ‛வேட்டையன்' படப்பிடிப்பு | வில்லன் நடிகருடன் பிரேக்கப்பா? - புகைப்படம் மூலம் முற்றுப்புள்ளி வைத்த காதலி | இறுதிக்கட்ட படப்பிடிப்பில் திரிஷாவின் ஐடென்டிட்டி | ஜப்பானில் வெளியாகும் 777 சார்லி ரிலீஸ் தேதி அறிவிப்பு | பவன் கல்யாண் பட டைட்டிலில் சமந்தா நடிக்கும் புதிய படம் |
தம்பி ராமைய்யாவின் மகன் உமாபதி, 'அதாகப்பட்டது மகாஜனங்களே' என்ற படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமாகிறார். இன்ப சேகர் என்ற புதுமுகம் இயக்கி உள்ளார், இமான் இசை அமைத்துள்ளார். படத்தில் நடித்திருப்பது பற்றி உமாபதி கூறியதாவது:
எனக்கு சின்ன வயதிலிருந்தே நடிப்பு மீதுதான் ஆர்வம் அதிகம். ஆனால் அப்பாவிற்கு நான் சினிமா பக்கமே வரக்கூடாது என்கிற எண்ணம். அவர் இசைத் துறையில் பெரிய லெவலுக்கு வரவேண்டும் என்று விரும்பினார், அது நடக்காமல் போனதால் நான் இசைத் துறையில் வளர வேண்டும் என்று விரும்பினார். ஒரு வேளை சினிமாவுக்கு வந்தாரலும் இசை அமைப்பாளராகவோ, பாடகராகவோதான் வரவேண்டும் என்று ஆசைப்பட்டார். இதனால் என்னை படப்பிடிப்புக்குகூட அழைத்துச் செல்லமாட்டார், சினிமா விழாக்களுக்கு அழைத்துச் செல்லமாட்டார்.
ஆனால் அவருக்கு தெரியாமல் நான் பள்ளி, கல்லூரியில் நாடகத்தில் நடித்தேன். ஒரு கட்டத்தில் தெரிந்ததும் என் விருப்பத்தை சொன்னேன். அப்போது அவர் உன் விருப்பப்படி செய், என் ஆசையை திணிக்க மாட்டேன். ஆனால் சினிமா வாய்ப்பை நீயாகத்தான் தேடிக் கொள்ள வேண்டும். நான் யாரிடமும் சிபாரிசு செய்ய மாட்டேன் என்றார்.
நானாக வாய்ப்பு தேடினேன். எந்த இடத்திலும் நான் தம்பி ராமைய்யா மகன் என்று சொல்லிக் கொண்டதில்லை. 60 பேர் கலந்து கொண்ட ஆடிசனில் தேர்வாகித்தான் அதாகப்பட்டது மகாஜனங்களே படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. நான் தேர்வு பெற்றதும்தான் அவர்களுக்கு தம்பி ராமய்யா மகன் என்பதே தெரியும். அப்பாவை அழைத்துப் பேசினார்கள். அவர் நடிக்க சம்மதம் தெரிவித்தார். அதன் பிறகுதான் நடித்தேன். மகன் என்ற முறையில் அவர் செய்த ஒரு உதவி இசை அமைப்பாளர் இமானை இந்த படத்துக்குள் கொண்டு வந்ததுதான். அப்பாவின் இசை ஆர்வத்தை நிறைவேற்ற முடியவில்லையே என்ற கவலை எனக்கு இப்போதும் இருக்கிறது. என்கிறார் உமாபதி.