போஜ்புரி நடிகை தற்கொலை : இறப்புக்கு முன் வெளியிட்ட பதிவு | செப்டம்பர் 27ல் திரைக்கு வரும் அமரன் | புத்திகெட்டு திரிந்தால்தான் புத்தி வரும் : செல்வராகவன் | தக்லைப் படத்தில் இணைந்த இரண்டு பாலிவுட் நடிகர்கள் | இளையராஜா பற்றி இனி பேசினால் நடப்பதே வேறு : வைரமுத்துவை எச்சரித்த கங்கை அமரன் | ஆன்மிகப் பயணத்தால் மாறிய வாழ்க்கை : ரம்யா பாண்டியன் வெளியிட்ட பதிவு | அஜித் படத்தில் இணையும் இளம் நடிகை | மே 17ல் ரிலீஸ் ஆகும் எலக்சன் படம் | ஆளைக் கொல்லும் நடிப்பு : பஹத் பாசிலுக்கு நயன்தாரா பாராட்டு | துருவா சார்ஜா வீட்டு விழாவில் குடும்பத்துடன் பங்கேற்ற சஞ்சய் தத் |
முன்னாள் கதாநாயகியான நடிகை ரோகிணி "மாலை பொழுதின் மயக்கத்திலே" என்ற புதிய படத்தின் மூலம் முதன் முறையாக பாடல்களை எழுதி இருக்கிறார். இதன் மூலம் பாடலாசிரியராகவும் இவர் மாறி இருக்கிறார். இயக்குநர் மிஷ்கினிடம் இணை இயக்குநராக பணியாற்றிய ஆதி என்பவர் இப்படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமாகிறார். புதுமுகம் ஆரி என்பவர் கதாநாயகனாகவும், மிஸ் பெங்களூர் சுபா கதாநாயகியாகவும் அறிமுகம் ஆகிறார்கள். மாலை 6-30 மணி முதல் 8-30 மணி வரை நடைபெறும் சம்பவங்களையும், அன்றாடம் சந்திக்கும் பிரச்சினைகளையும் கோர்வையாக்கி அதில் ஒரு அழகான காதலையும் சேர்த்து திரைக்கதை அமைத்துள்ளார் புதுமுக இயக்குநர். இப்படத்தின் படப்பிடிப்பு சென்னையில் தொடங்கி, கோவா, கேரளா, மும்பை ஆகிய இடங்களில் நடைபெற இருக்கிறது. பாடல் காட்சிகள் ஆஸ்திரியா, நியூசிலாந்து, பிஜி தீவுகளில் படமாக்கப்பட உள்ளன.