‛ஆனந்த ராகம்...' பாடிய பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார் | ஒரு பாடலுக்கு நடனம் : விஜய் படத்தை நிராகரித்த ஸ்ரீ லீலா | இயக்குனருடன் சண்டை : படப்பிடிப்பை நிறுத்திய சவுந்தர்யா ரஜினிகாந்த் | மலையாளத்தில் மட்டுமே வெளியான நிவின்பாலி படம் | மூன்று வாரம் முன்கூட்டியே ரிலீசாகும் மம்முட்டியின் டர்போ | 100 கிலோ எடை தூக்கிய ராஷ்மிகா மந்தனா | நடிகை பிரக்யா நக்ராவை திருமணம் செய்தாரா ஜெய்? | அஜித்தின் 53வது பிறந்தநாள் : பரிசாக பைக் வழங்கிய ஷாலினி | தனி வீடு வாங்கிய ஐஸ்வர்யா ரஜினிகாந்த் | குக் வித் கோமாளியில் என்ட்ரி கொடுக்கும் அக்ஷய் கமல் |
இயக்குநர் ஷங்கர் தயாரிப்பில் பாலசந்தர் பாரதிராஜாவை இணைந்து நடிக்க வைத்து 'ரெட்டச்சுழி' படத்தை இயக்கியவர் தாமிரா. அடிப்படையில் சிறுகதை எழுத்தாளரான இவர் தற்போது சமுத்திரக்கனியை ஹீரோவாக வைத்து ஆண் தேவதை என்ற படத்தை இயக்கி வருகிறார். தன்னுடைய குருநாதர் கே.பாலசந்தர் நினைவாக சிகரம் சினிமாஸ் என்ற படநிறுவனத்தைத் தொடங்கியுள்ள தாமிரா தன்னுடைய நண்பரான ஃபக்ருதீன் என்பவருடன் இணைந்து இந்தப்படத்தை தயாரிக்கிறார். தாமிராவின் நீண்டநாள் நண்பரான விஜய் மில்டன் ஆண்தேவதை படத்துக்கு ஒளிப்பதிவு செய்கிறார். தான் அடுத்து இயக்க உள்ள பட வேலைகளை தள்ளி வைத்துவிட்டு இந்தப் படத்துக்கு ஒளிப்பதிவு செய்ய ஒப்புக்கொண்டாராம்.
இந்தப்படத்தில், 'ஜோக்கர்' படத்தில் அறிமுகமான ரம்யா பாண்டியன் கதாநாயகியாக நடிக்கிறார். கதாநாயகியாக நடிப்பது மட்டுமல்ல இரண்டு குழந்தைகளுக்கு அம்மாவாகவும் நடிக்கிறார் ரம்யா பாண்டியன். பொதுவாக அம்மாவாக நடிப்பதை கதாநாயகி நடிகைகள் விரும்ப மாட்டார்கள். அப்படி நடித்தால் அம்மா நடிகை என்று முத்திரை குத்திவிடுவதோடு, இளமையான கதாபாத்திரங்களில் நடிக்க அழைக்க மாட்டார்கள் என்று அஞ்சுவார்கள். ரம்யா பாண்டியனோ தைரியமான நடிகையாக இருக்கிறார். இரண்டு குழந்தைகளுக்கு அம்மாவாக நடித்தால் என்ன தப்பு? என்று துணிச்சலாக கேட்கிறாராம். அவரது துணிச்சலைக் கண்டு சக நடிகைகள் ஆச்சர்யமடைந்துள்ளனர்