‛ஆனந்த ராகம்' பாடிய அபூர்வ குரல் உமா ரமணன் காலமானார் | ஒரு பாடலுக்கு நடனம் : விஜய் படத்தை நிராகரித்த ஸ்ரீ லீலா | இயக்குனருடன் சண்டை : படப்பிடிப்பை நிறுத்திய சவுந்தர்யா ரஜினிகாந்த் | மலையாளத்தில் மட்டுமே வெளியான நிவின்பாலி படம் | மூன்று வாரம் முன்கூட்டியே ரிலீசாகும் மம்முட்டியின் டர்போ | 100 கிலோ எடை தூக்கிய ராஷ்மிகா மந்தனா | நடிகை பிரக்யா நக்ராவை திருமணம் செய்தாரா ஜெய்? | அஜித்தின் 53வது பிறந்தநாள் : பரிசாக பைக் வழங்கிய ஷாலினி | தனி வீடு வாங்கிய ஐஸ்வர்யா ரஜினிகாந்த் | குக் வித் கோமாளியில் என்ட்ரி கொடுக்கும் அக்ஷய் கமல் |
வெங்கட் பிரபு இயக்கி வெற்றி பெற்ற சென்னை 28 படத்தின் இரண்டாம் பாகம் இப்போது தயாராகி உள்ளது. அதில் நடித்த ஜெய், மிர்சி சிவா, விஜயலட்சுமி, பிரேம்ஜி, விஜய் வசந்த், நிதின் சத்யா ஆகியோர் மீண்டும் நடிக்கிறார்கள். முதல் பாகத்துக்கு இசை அமைத்த யுவன் ஷங்கர் ராஜா 2ம் பாகத்துக்கும் இசை அமைத்திருக்கிறார். இதன் பாடல் மற்றும் டிரைலர் வெளியீட்டு விழா வருகிற 7ந் தேதி மலேசியாவில் பிரமாண்ட விழா நடத்தி வெளியிடப்படுகிறது. இதற்காக சென்னை 28 டீம் மலேசியா புறப்பட்டுச் செல்கிறது.
இது குறித்து இயக்குனர் வெங்கட்பிரபு கூறியிருப்பதாவது: தமிழ் திரைப்படங்களின் சொர்க்க வாசலாக கருதப்படும் ஒரு நாடு மலேசியா. ஒவ்வொரு படங்களையும் திருவிழாவாக கொண்டாடும் மலேசியா ரசிகர்கள் தான் அந்த சொர்க்க வாசலின் வலுவான தூண்கள். தமிழ் திரையுலகின் வெற்றி பாதைக்கு சிறந்ததொரு கலங்கரை விளக்கமாக திகழ்வது மலேசியா. சிறந்த திரைப்படங்கள், பல மலேசியாவில் படமாக்கப்பட்டது மட்டுமின்றி, அங்கே சிறப்பான முறையில் விளம்பரபடுத்தப்பட்டிருப்பதே அதற்கு சிறந்த உதாரணம்.
அதுமட்டுமின்றி, பல திறமையான கலைஞர்களை சினிமாவிற்கு வழங்கிய பெருமையும் மலேசியாவிற்கு உண்டு. அத்தகைய அற்புதமான ரசிகர்கள் மத்தியில் எங்களின் சென்னை 28 இரண்டாம் பாகத்தின் இசை மற்றும் டிரைலரை வெளியிடுவதை பெருமையாக கருதுகிறோம். யுவன்ஷங்கர் ராஜா மீது மலேசிய ரசிகர்கள் வைத்திருக்கும் பேரன்பை மனதில் கொண்டு, அங்கே எங்களின் இசை மற்றும் டிரைலரை வெளியிட முடிவு செய்திருக்கிறோம் " என்கிறார் வெங்கட் பிரபு.