ரெட்ட தல படப்பிடிப்பு துவங்கியது | எவரெஸ்ட் சிகரத்திற்கு டிரக்கிங் சென்ற ஜோதிகா | போட்டோ சூட் நடத்திய நிறைமாத கர்ப்பிணி அமலா பால் | அரிவாளுடன் விக்ரம் நிற்கும் வீர தீர சூரன் போஸ்டர் : போலீசுக்கு பறந்த புகார் | குழந்தை பிறப்பை தள்ளி போடாதீர்கள் - சீரியல் நடிகை ஜூலி அட்வைஸ் | 100 நாட்களைக் கடந்த ‛வேட்டையன்' படப்பிடிப்பு | வில்லன் நடிகருடன் பிரேக்கப்பா? - புகைப்படம் மூலம் முற்றுப்புள்ளி வைத்த காதலி | இறுதிக்கட்ட படப்பிடிப்பில் திரிஷாவின் ஐடென்டிட்டி | ஜப்பானில் வெளியாகும் 777 சார்லி ரிலீஸ் தேதி அறிவிப்பு | பவன் கல்யாண் பட டைட்டிலில் சமந்தா நடிக்கும் புதிய படம் |
தமிழ்த் திரையுலகம் மட்டுமல்லாது இந்தியத் திரையுலகமே 'பைரசி' பிரச்சனையால் சிக்கித் தவித்துக் கொண்டிருக்கிறது. ஒரு படம் வெளிவந்த அடுத்த சில மணி நேரங்களுக்குள் அந்தப் படம் இணைய தளங்களில் வெளியாகிறது. அதைத் தொடர்ந்து அவை டிவிடியிலும் பதிவு செய்யப்பட்டு விற்கப்படுகிறது. இதன் மூலம் தயாரிப்பாளர்கள் பெரிதும் சிரமத்திற்கு ஆளாகிறார்கள்.
மத்திய அரசும், தொலைத் தொடர்பு வசதிகளை ஏற்படுத்தித் தந்துள்ள தனியார் நிறுவனங்களும், மாநில அரசுகளும் மனது வைத்தால் இந்தப் பிரச்சனைக்கு நிரந்தரத் தீர்வை ஏற்படுத்த முடியும். ஆனால், ஏனோ இந்த விஷயத்தில் யாரும் இன்னமும் தீவிர கவனம் செலுத்தாமல் இருக்கிறார்கள்.
கடந்த வாரம் தனுஷ் நடித்த 'தொடரி', விஜய் சேதுபதி நடித்த 'ஆண்டவன் கட்டளை' ஆகிய படங்கள் வெளிவந்தன. அந்தப் படங்கள் வெளியான அன்றே இணையதளங்களில் வெளியாகின. 'தொடரி' படத்தின் தயாரிப்பாளர் தரப்பிலிருந்து அப்படிப்பட்ட இணையதளங்களை முடக்கும் வேலைகளும் செய்யப்பட்டன. ஆனாலும், அவர்கள் தங்களது இணைய முகவரிகளை மாற்றி மாற்றி வெளியிட்டுக் கொண்டிருக்கிறார்கள்.
இதனிடையே, இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் கடலூர் மாவட்டத்தைச் சேர்ந்த விஜய் ரசிகர்கள் ஊர்வலமாகச் சென்று மாவட்ட காவல்துறையிடம் புகார் மனுவை அளித்தனர். மற்ற நடிகர்கள் நடித்த படமாக இருந்ததலும் 'பைரசி' மூலம் திரையுலகம் பாதிக்கப்படுகிறது என்பதால் புகார் மனு அளித்தோம் என அவர்கள் தெரிவித்துள்ளார்கள்.
விஜய் ரசிகர்களின் இந்த செயலுக்கு நடிகர் தனுஷ் நன்றி தெரிவித்துள்ளார். நடிகர் சங்க செயலாளர் விஷாலும் விஜய் ரசிகர்களுக்கு தன்னுடைய நன்றியைத் தெரிவித்துள்ளார். இதைப் போல மற்ற நடிகர்களது ரசிகர்களும் செய்ய முன் வரவேண்டும். ரசிகர்களால் தான் இதற்கு ஒரு மாற்றத்தைக் கொண்டு வர முடியும் என்றும் அவர் கூறியுள்ளார்.
'பைரசி'யை எதிர்த்து கடந்த சில வருடங்களாகவே விஷால் தனி ஆளாக குரல் கொடுத்து வருகிறார். சில தினங்களுக்கு முன்பு இதுகுறித்து விஷாலின் பதிவிற்கு எந்த ஒரு பதிலும் சொல்லாத தனுஷ், விஜய் ரசிகர்களுக்கு மட்டும் நன்றி தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.