ஒரு பாடலுக்கு நடனம் : விஜய் படத்தை நிராகரித்த ஸ்ரீ லீலா | இயக்குனருடன் சண்டை : படப்பிடிப்பை நிறுத்திய சவுந்தர்யா ரஜினிகாந்த் | மலையாளத்தில் மட்டுமே வெளியான நிவின்பாலி படம் | மூன்று வாரம் முன்கூட்டியே ரிலீசாகும் மம்முட்டியின் டர்போ | 100 கிலோ எடை தூக்கிய ராஷ்மிகா மந்தனா | நடிகை பிரக்யா நக்ராவை திருமணம் செய்தாரா ஜெய்? | அஜித்தின் 53வது பிறந்தநாள் : பரிசாக பைக் வழங்கிய ஷாலினி | தனி வீடு வாங்கிய ஐஸ்வர்யா ரஜினிகாந்த் | குக் வித் கோமாளியில் என்ட்ரி கொடுக்கும் அக்ஷய் கமல் | மீண்டும் முத்தையா இயக்கத்தில் விஷால் |
அஜித்தை வைத்து சிவா இயக்கிய 'வீரம்', 'வேதாளம்' ஆகிய இரண்டுமே வெற்றிப் படங்களாக அமைந்தன. வேதாளம் படத்தின் வெற்றியைக்கண்டு மகிழ்ந்துபோன அஜித் தன்னுடைய அடுத்தப்படத்தை இயக்கும் வாய்ப்பையும் சிவாவுக்கே கெழடுத்தார். அஜித்தும் சிவாவும் மூன்றாவது முறையாக கூட்டணி அமைத்துள்ள அஜித்தின் 57-வது படத்தின் படப்பிடிப்பு வெளிநாடுகளில் நடைபெற்று வந்தது.
அஜித்துடன் காஜல் அகர்வால், அக்ஷரா ஹாசன் முதலானோர் நடிக்கும் இப்படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பு முடிந்து படக்குழுவினர் சில தினங்களுக்கு முன் சென்னை திரும்பியுள்ளனர். இப்படத்தின் அடுத்தகட்ட படப்பிடிப்பு சென்னையில் உள்ள ஈவிபி பொழுதுபோக்கு மையத்தில் செட் போட்டு படமாக்க திட்டமிட்டிருந்தனர்.
அங்கே 2.0 படப்பிடிப்பு நடைபெறுவதால் தனக்கு பிரைவசி இருக்காது என்று பீல் பண்ணினாராம் அஜித். எனவே ஐதராபாத்தில் உள்ள ராமோஜிராவ் பிலிம்சிட்டியில் செட் போட உள்ளனர். அடுத்த மாதம் அங்கே படப்பிடிப்பு துவங்கவிருக்கிறது. இப்படத்தில் உளவுத்துறை அதிகாரியாக மாறுபட்ட ஒரு கேரக்டரில் நடித்து வருகிறார் அஜித்.
அவருக்கு சமமான வில்லன் வேடங்களில் பாலிவுட்டை சேர்ந்த இரண்டு நடிகர்களை வில்லன்களாக நடிக்க வைக்க இயக்குநர் சிவா முடிவு செய்திருக்கிறார். இது சம்பந்தமான அதிகாரபூர்வமான அறிவிப்பை விரைவில் வெளியிடவிருக்கிறார்கள். இப்படத்திற்கு அனிருத் இசை அமைக்கிறார். சமீபத்தில் வெளியாகி வெற்றிகரமாக ஓடி கொண்டிருக்கும் 'தொடரி' படத்தை தயாரித்த 'சத்யஜோதி ஃபிலிம்ஸ்' இந்தப் படத்தை பிரம்மாண்டமான முறையில் தயாரிக்கிறது.