போஜ்புரி நடிகை தற்கொலை : இறப்புக்கு முன் வெளியிட்ட பதிவு | செப்டம்பர் 27ல் திரைக்கு வரும் அமரன் | புத்திகெட்டு திரிந்தால்தான் புத்தி வரும் : செல்வராகவன் | தக்லைப் படத்தில் இணைந்த இரண்டு பாலிவுட் நடிகர்கள் | இளையராஜா பற்றி இனி பேசினால் நடப்பதே வேறு : வைரமுத்துவை எச்சரித்த கங்கை அமரன் | ஆன்மிகப் பயணத்தால் மாறிய வாழ்க்கை : ரம்யா பாண்டியன் வெளியிட்ட பதிவு | அஜித் படத்தில் இணையும் இளம் நடிகை | மே 17ல் ரிலீஸ் ஆகும் எலக்சன் படம் | ஆளைக் கொல்லும் நடிப்பு : பஹத் பாசிலுக்கு நயன்தாரா பாராட்டு | துருவா சார்ஜா வீட்டு விழாவில் குடும்பத்துடன் பங்கேற்ற சஞ்சய் தத் |
ஆர்.ஜே.மீடியாக கிரியேஷன்ஸ் தயாரித்துள்ள படம் ஆங்கில படம். குமரேஷ் குமார் இயக்கி உள்ளார். ராம்கி, சஞ்சீவ், புதுமுகம் ஸ்ரீஜா, மீனாட்சி, சிங்கம்புலி, சிங்கமுத்து மதுமிதா நடித்துள்ளனர், எம்.சி.ரிக்கோ இசை அமைத்துள்ளார், சாய் சதீஷ் ஒளிப்பதிவு செய்துள்ளார். தமிழ் படத்துக்கு ஆங்கில படம் என்று பெயர் வைத்தது ஏன் என்று இயக்குனர் குமரேஷ் குமார் அளித்துள்ள விளக்கம் வருமாறு:
ஆங்கில படம் என்று பெயர் வைத்ததற்கு காரணம் இக்கதையில் வரும் அடுத்தடுத்த காட்சிகள் யாரும் யூகிக்க முடியாத அளவிற்கு கதை நகரும்.இந்த கதையை பல நடிகர்களிடம் சொன்னபோது கதை நல்லா இருக்கு ஆனா நீ புதுஇயக்குனர் சொன்னமாதிரி எடுப்பாயா என கேட்டனர் அனால் இப்போது ராம்கி,சஞ்சீவ் கூட்டணியில் படம் சூப்பராக வந்துள்ளது. படம் பார்த்த தயாரிப்பாளர் உள்பட அனைவரும் மகிழ்ச்சி.உண்மையிலே ரொம்ப சந்தோஷமாக உள்ளது.மேலும் சந்தோஷப்படுத்த படத்திற்கு யூ சான்றிதழ் கிடைத்துள்ளது.படம் விரைவில் திரைக்கு வரும், நிச்சயம் நீங்கள் எல்லோரும் திருப்தியான படமென்று சொல்வீர்கள் என்கிறார் குமரேஷ் குமார்.