போஜ்புரி நடிகை தற்கொலை : இறப்புக்கு முன் வெளியிட்ட பதிவு | செப்டம்பர் 27ல் திரைக்கு வரும் அமரன் | புத்திகெட்டு திரிந்தால்தான் புத்தி வரும் : செல்வராகவன் | தக்லைப் படத்தில் இணைந்த இரண்டு பாலிவுட் நடிகர்கள் | இளையராஜா பற்றி இனி பேசினால் நடப்பதே வேறு : வைரமுத்துவை எச்சரித்த கங்கை அமரன் | ஆன்மிகப் பயணத்தால் மாறிய வாழ்க்கை : ரம்யா பாண்டியன் வெளியிட்ட பதிவு | அஜித் படத்தில் இணையும் இளம் நடிகை | மே 17ல் ரிலீஸ் ஆகும் எலக்சன் படம் | ஆளைக் கொல்லும் நடிப்பு : பஹத் பாசிலுக்கு நயன்தாரா பாராட்டு | துருவா சார்ஜா வீட்டு விழாவில் குடும்பத்துடன் பங்கேற்ற சஞ்சய் தத் |
ராஜா ராணி படத்திற்கு பிறகு ஜெய் நடித்த நவீன சரஸ்வதி சபதம், வடகறி, திருமணம் என்னும் நிக்கா, வலியவன், புகழ், தமிழ்ச்செல்வனும் தனியார் அஞ்சலும் என பல படங்கள் வெளியானபோதும், எந்த படமும் சொல்லிக்கொள்ளும் அளவுக்கு வெற்றியை கொடுக்கவில்லை. இந்நிலையில், தற்போது சென்னை-28 பார்ட்-2, எனக்கு வாய்த்த அடிமைகள், பலூன் போன்ற படங்களில் தற்போது நடித்து வருகிறார்.
இதில், சென்னை-28 பார்ட்டி-2 அவர் பெரிதாக எதிர்பார்த்த படம் என்றபோது, அதில் மிர்ச்சி சிவா, பிரேம்ஜிக்கே முக்கியத்துவம் கொடுக்கப்பட்டிருப்பதால் தான் ஓரங்கட்டப்பட்டு விட்டதாக பீல் பண்ணிக்கொண்டிருக்கிறார் ஜெய். அதனால்தான் அந்த படத்தின் பிரஸ்மீட்டில்கூட அவர் கலந்து கொள்ளாமல் புறக்கணித்தார்.
இந்த நிலையில், தற்போது கருணாகரன், நான் கடவுள் ராஜேந்திரன் போன்ற காமெடியன்களுடன் இணைந்து நடித்து வரும் எனக்கு வாய்த்த அடிமைகள் படத்தை ரொம்பவே எதிர்பார்க்கிறார் ஜெய். காதல் கதையில் உருவாகும் இந்த படத்தில் காமெடி பெரிய அளவில் ஒர்க்அவுட்டாகியுள்ளதாம். அதனால் ஒருவேளை காதல் கைகொடுக்கவில்லையென்றாலும் காமெடி கைகொடுத்து தன்னை காப்பாற்றி விடும் என்று நம்பும் ஜெய், இந்த படத்தை எப்படியேனும் ஹிட் படமாக கொடுத்து விட வேண்டும் என்று கூடுதலாக மெனக்கெட்டு வருகிறாராம்.