போஜ்புரி நடிகை தற்கொலை : இறப்புக்கு முன் வெளியிட்ட பதிவு | செப்டம்பர் 27ல் திரைக்கு வரும் அமரன் | புத்திகெட்டு திரிந்தால்தான் புத்தி வரும் : செல்வராகவன் | தக்லைப் படத்தில் இணைந்த இரண்டு பாலிவுட் நடிகர்கள் | இளையராஜா பற்றி இனி பேசினால் நடப்பதே வேறு : வைரமுத்துவை எச்சரித்த கங்கை அமரன் | ஆன்மிகப் பயணத்தால் மாறிய வாழ்க்கை : ரம்யா பாண்டியன் வெளியிட்ட பதிவு | அஜித் படத்தில் இணையும் இளம் நடிகை | மே 17ல் ரிலீஸ் ஆகும் எலக்சன் படம் | ஆளைக் கொல்லும் நடிப்பு : பஹத் பாசிலுக்கு நயன்தாரா பாராட்டு | துருவா சார்ஜா வீட்டு விழாவில் குடும்பத்துடன் பங்கேற்ற சஞ்சய் தத் |
ரஜினி நடித்த கோச்சடையான் அனிமேஷன் படத்தை இயக்கியவர் செளந்தர்யா ரஜினி. அதன்பிறகும் அவர் படம் இயக்க தயாராக இருந்தபோதும், அதற்கு ரஜினி அனுமதி கொடுக்கவில்லை. அதனால் பின்னர் குடும்ப வாழ்க்கைக்கு திரும்பினார் செளந்தர்யா. இந்நிலையில், தற்போது அவரது குடும்ப வாழ்க்கையில் கருத்து வேறுபாடு ஏற்பட்டு கணவரை பிரிந்து வாழ்ந்து வருகிறார். அதை யடுத்து, விலங்குகள் நல வாரிய தூதுவராகவும் நியமிக்கப்பட்டிருக்கிறார் செளந்தர்யா.
மேலும், தற்போது அவருக்கு மீண்டும் படம் இயக்கும் ஆர்வம் ஏற்பட்டுள்ளது. அதனால், தனுஷ் எழுதிய நிலவுக்கு என் மேல் என்னடி கோபம் -என்ற கதையை இயக்க தயாராகிவிட்டார் செளந்தர்யா ரஜினி.
படத்தில் நிறைய புதுமுகங்கள் நடிக்க உள்ளனர். இதற்காக ஆர்வமுள்ளவர்களிடமிருந்து புகைப்படங்களுடன் தகவல்கள் வரவேற்கப்படுவதாக தாணு அறிவித்துள்ளார். இது குறித்த தொடர்புக்கு: உதவி இயக்குனர் சிரஞ்சீவி - 9629337116. இணையதள முகவரி: neekcasting@gmail.com.
தனுஷ் இயக்கும் முதல் படமான, பவர் பாண்டி படத்தில், தனுஷ் கவுரவ வேடத்தில் நடிக்கிறார்; சவுந்தர்யா இயக்கும் படத்திலும், தனுஷ் நடிக்க வாய்ப்புள்ளது. இது குறித்த அறிவிப்பு, விரைவில் வெளியாகும் என, எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும், கபாலியைத் தொடர்ந்து மீண்டும் ரஜினி-ரஞ்சித் இணையும் படத்தை தயாரிக்கும் தனுஷே, செளந்தர்யா ரஜினி இயக்கும் இந்த படத்தையும் தனது வுண்டர்பார் பிலிம்ஸ் சார்பில் தயாரிக்கிறாராம்.