ஹிந்திக்கு செல்லும் தில் ராஜூ! | ரன்வீர் சிங்கை இயக்கும் ஹனுமான் பட இயக்குனர்! | மே 1ம் தேதி ரீ ரிலீஸாகும் தீனா படம்! | கவின், ஆண்ட்ரியா படத்திற்கு இசையமைக்கும் ஜி.வி. பிரகாஷ்! | ஹாலிவுட்டில் ரீ ரிலீசாகிறது 'இன்டர்ஸ்டெல்லர்' | பெண்களை அடிமைப்படுத்தும் 'பரதா': சர்ச்சையுடன் உருவாகும் புதிய படம் | இணையத்தில் கசிந்த 'ராமாயணம்' படப்பிடிப்பு காட்சிகள்: படக்குழு அதிர்ச்சி | புதிய அமைப்பு தொடங்குகிறார் ராகவா லாரன்ஸ் | அப்பாவாக நடிப்பது பெருமை: சமுத்திரகனி | அபிநந்தனாக நடிப்பதே கஷ்டமாக இருந்தது: பிரசன்னா |
மலையாளத்தில் இரண்டு படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்துவர் காளிதாஸ். நடிகர் ஜெயராமின் வாரிசான இவர் தமிழில் ஒரு பக்க கதை என்ற படத்தில்தான் முதலில் கமிட்டாகி நடித்து வந்தார். அந்த படத்தை விஜயசேதுபதி நடித்த நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம் படத்தை இயக்கிய பாலாஜி தரணீதரன் இயக்கினார். ஆனால், என்ன காரணமோ அந்த படம் இன்னும் திரைக்கு வரவில்லை. இதற்கிடையே தற்போது மீன்குழம்பும் மண்பானையும் என்ற படத்தில் நடித்து முடித்து விட்டார்காளிதாஸ். அப்படம் ரிலீசுக்கு தயாராகிக்கொண்டிருக்கிறது.
மேலும், காளிதாஸின் தந்தை ஜெயராமும், கமலும் நண்பர்கள் என்பதால், கமல்தான் ஒரு பக்க கதை படத்தின் பூஜையின்போது மீடியாக்களுக்கு காளிதாஸை அறிமுகம் செய்து வைத்தார். இந்நிலையில், தற்போது காளிதாஸ் நடித் துள்ள மீன்குழம்பும் மண்பானையும் படத்திலும் ஒரு சிறிய வேடத்தில் நடித் துள்ளார் கமல்.
இதுபற்றி காளிதாஸ் ஜெயராம் கூறுகையில், இந்த படத்தில் நடிக்க கமல் சாரை ராம்குமார் சார் கேட்டபோது, எந்த யோசனையும் இன்றி எப்போது படப்பிடிப்பு என்று சொல்லுங்கள் வந்து நடிக்கிறேன் என்றார். அதையடுத்து அவர் நடிக்க வரவேண்டியநாள் வந்ததும், எனக்கும் அவருடன் காட்சி இருந்ததால் மிகுந்த சந்தோசமாகி விட்டேன். அதனால் படப்பிடிப்புக்கு முந்தின நாள் ராத்திரி முழுக்க எனக்கு தூக்கமே இல்லை. அடுத்தநாள், சொல்ல முடியாத மகிழ்ச்சியுடன் ஸ்பாட்டுக்கு சென்று நடித்தேன். கமல் சார் பெரிய நடிகர் என்றபோதும், அவர் எங்களுக்காக இறங்கி வந்து நடித்தார். அந்த அனுபவத்தை என் வாழ்நாளில் மறக்கவே முடியாது என்கிறார் காளிதாஸ் ஜெயராம்.