‛ஆனந்த ராகம்...' பாடிய பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார் | ஒரு பாடலுக்கு நடனம் : விஜய் படத்தை நிராகரித்த ஸ்ரீ லீலா | இயக்குனருடன் சண்டை : படப்பிடிப்பை நிறுத்திய சவுந்தர்யா ரஜினிகாந்த் | மலையாளத்தில் மட்டுமே வெளியான நிவின்பாலி படம் | மூன்று வாரம் முன்கூட்டியே ரிலீசாகும் மம்முட்டியின் டர்போ | 100 கிலோ எடை தூக்கிய ராஷ்மிகா மந்தனா | நடிகை பிரக்யா நக்ராவை திருமணம் செய்தாரா ஜெய்? | அஜித்தின் 53வது பிறந்தநாள் : பரிசாக பைக் வழங்கிய ஷாலினி | தனி வீடு வாங்கிய ஐஸ்வர்யா ரஜினிகாந்த் | குக் வித் கோமாளியில் என்ட்ரி கொடுக்கும் அக்ஷய் கமல் |
கெனன்யா பிலிம்ஸ் சார்பில் ஜெ.செல்வக்குமார் தயாரித்து வரும் படம் சர்வர் சுந்தர். சந்தானம், மராட்டிய நடிகை வைபவி ஷந்திலியா நடித்து வருகிறார்கள். புதுமுகம் ஆனந்த் பால்கி இயக்குகிறார். சந்தோஷ் நாராயணன் இசை அமைக்கிறார். பி.கே.வர்மா ஒளிப்பதிவு செய்கிறார்.
சர்வர் சுந்தரத்தின் படப்பிடிப்புகள் சென்னை மற்றும் கோவாவில் நடந்தது. 80 சதவிகித படப்பிடிப்பு முடிந்து விட்டது. இதன் கிளைமாக்ஸ் படப்பிடிப்புகள் துபாயில் நடக்கிறது. ஒரு பாடல் காட்சியும், கிளைமாக்ஸ் காட்சியும் படமாக்கப்பட வேண்டியது இருக்கிறது. இரண்டையும் துபாயில் படமாக்க திட்டமிட்டனர். இதற்காக படக் குழுவினர் துபாய் சென்றுள்ளனர். துபாயில் 12 நாட்கள் தொடர்ந்து படப்பிடிப்பு நடக்கிறது. அதன் பிறகு டப்பிங், பின்னணி இசை கோர்ப்பு பணிகள் நடக்க இருக்கிறது.